மலபார் காயல் நலமன்றத்தின் 100 வது செயற்குழு அதன் அலுவலகத்தில் 13.11.2016அன்று நடைபெற்றது ..அவர்கள் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு ….
எமது மன்றத்தின் 100 வது செயற்குழு கூட்டம் அதன் அலுவலகத்தில் 13/11/2016 ஞாயிரு அன்று நடைபெற்றது…
நிகழ்ச்சிக்கு அதன்தலைவர் S. N.ரஹம்துல்லாஹ்தலைமையில் செயலாளர் N. M. முஹைதீன்அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்றது…
கடந்த செயற்குழுவில் நிகழ்வுகள் வாசிக்கப்பட்டு கூட்டம் ஒப்புதல் பெறப்பட்டது ….மேலும் 100 வது செயர்குழுவின் தீர்மானங்களாக கீழ்கண்டவை நிறைவேற்றப்பட்டன
1) டிசம்பர் 8 கேன்சர் விழிப்புணர்வு முகாம்ஏற்கனவே திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேற்றுவது என்றும்.
2) காயல் ஐக்கியபேரவை அனுப்பிய கடிதத்திற்கு அதன் சட்ட திட்ட செயல்முறை தெளிவாக எடுத்துரைக்க பட்ட பின் அதுகுறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ..தீர்மானம் நிறைவேற்றப்பட்டது… மேலும் உதவிக்கடித்தங்கள் பரிசீலிக்கப்பட்டது.
கேன்சர் விழிப்புணர்வு நிகழ்ச்சி mkwa உறுப்பினர்களின் குடும்பம் மேலும் நகரின் அனைத்து மக்களையும் பங்கெடுக்க வைப்பதற்கு முயற்சி செய்யவேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது …
தகவல்: S. N. மீரான், செய்தித்தொடர்பாளர்(mkwa)