கோயம்புத்தூரில் நடைபெறும் “தனம்” கோப்பைக்கான Academy அளவிலான கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் 12 வயதுக்குற்பட்டவர்கள் அணி பங்கேற்பு!
பயிற்சி மையம் (Academy) அளவில் 12 வயதுக்குற்பட்ட இளம் வீரர்கள் பங்கேற்கும் ”தனம்” கோப்பைக்கான கால்பந்து போட்டி கோயம்புத்தூரில் இன்று (26/11/2016) முதல் நடைபெற்று வருகின்றது.
இந்த ஐவர் கால்பந்து போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. 4 அணிகள் கொண்ட 4 குரூப்பாக பிரிக்கப்பட்டு, முதல் சுற்று முற்றிலும் லீக் முறையில் நடைபெறுகின்றது. ஒவ்வொறு பிரிவிலும் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று (25/11/2016) இரவு 8 மணியளவில் காயல்பட்டினம் ”வீ-யூனைடெட்” ஸ்போட்ஸ் அக்கடமியைச் சேர்ந்த 3 அணியினர்கள் வேன் மூலம் கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்படனர்.
அணி வீரர்களை ”வீ-யூனைடெட்” பயிற்சி மையத்தின் பொறுப்பாளர்கள் சகோ. ஜஹாங்கிர், சகோ. சொளுக்கு முஹம்மது தம்பி, சகோ. சேக் முஹம்மது, சகோ. ஜவஹர், பயிற்சியாளர் சகோ. இஸ்மாயில் மற்றும் இளம் வீரர்களின் பெற்றோர்கள் வழியனுப்பினார்கள்.
இன்று காலை நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற ”வீ-யூனைடெட்” அகடமி அணியினர் கோல் ஏதுமின்றி முதல் போட்டியை சமன் செய்துள்ளனர். தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நிலைப்படம் மற்றும் தகவல்: M. ஜஹாங்கிர்