*காயல்பட்டணம் எல்.கே.மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி எஸ்.டி.என். மும்தாஜ் ருகைய்யா மாநில அளவிலான ஓவிய போட்டியில் முதலிடம்.*
*தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப்போட்டியில் எல்.கே மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.டி.என். மும்தாஜ் ருக்கைய்யா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.*
*இவர் மரைக்கார்பள்ளித்தெரு அல்ஹாஜ் தூள் மஹ்மூது புஹாரி அவர்களின் மகன் வழி பேத்தியும், சின்ன நெசவுத் தெரு அல்ஹாஜ் எம்.ஏ.எஸ். ஜரூக் அவர்களின் மகள் வழி பேத்தியும், தம்மாம் காயல் நல மன்றத்தின் உறுப்பினர் அல்ஹாஜ் எம்.பி. ஷேக் தாவூத் நுஜைர் அவர்களின் அருமை மகளும் ஆவார். இம்மாணவி ஆங்கில பேசாற்றலிலும் திறமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.*
நிலைப்படம் மற்றும் தகவல் : M.A.K. ஜெய்னுல் ஆப்தீன்