மசூதி, சர்ச், கோயில்களில் உள்ள ஒலிபெருக்கிகள் தொடர தமிழக அரசு விதிவிலக்கு அளிக்க வேண்டும் . நிதியமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. நேரில் வலியுறுத்தல்
முதலமைச்சரின் இலாக்களை கவனிக்கும் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 24-11-2016 நேரில் சந்தித்தார்.
சந்திப்புக்குபின் நிருபர்களிடத்தில் MLA கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற குழுக்களை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே தி.மு.க மனு அளித்துள்ளது. இப்போது காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் குழுக்களை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றோம்.
நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் சட்டமன்ற உறுப்பினர் நிதிக்கான பணிகள் விரைவாக நடைபெற வலியுறுத்தினோம்.
அதோடு, முஸ்லிம் சமுதாய பிரச்சினையான பள்ளிவாசல்களில் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என காவல்துறையினர் கெடுபிடி செய்கிறார்கள். இதுசம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் தமிழக அரசின் கருத்தை கேட்டிருக்கிறது.
எனவே, தமிழக அரசு மசூதி, சர்ச், கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை தொடர்ந்து பயன்படுத்தி கொள்வதற்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவர் இவ்விஷயமாக தலைமை செயலாளருக்கு தகவல் அனுப்பி இருப்பதாகவும், நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
தகவல்: கவிஞர் கமால் , கடையநல்லூர்