மாவட்ட அளவில் நடந்த ஷேக்ஸ்பியர்இலக்கிய விழாவில் விஸ்டம் பள்ளி மாணவி முதலிடம்
சேக்ஸ்பியரின் 400 வது நினைவு நாளை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியால் Shakespeare Lives 2016 என்ற தலைப்பில் இலக்கிய விழா (Literary Fest) நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட இப்போட்டியில் 22 பள்ளிகள் கலந்து கொண்டன. ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் Sonnet Recitation ஆகிய போட்டிகள் இவ்விழாவில் நடைபெற்றது.
இதில் எம் பள்ளியின் சார்பாக மாணவிகள் R.S.கதீஜா நஜ்லா, M.A.ஜெய்த்துன் பாத்திமா மற்றும் S.I.ஆயிஷா நிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
S.I.ஆயிஷா நிதா Sonnet Recitation போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார். அம்மாணவிக்கு எம்பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: Wisdom Public School.