அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், KCGC சார்பில் , சென்னை கிரவுன் அரிமா சங்கம் மற்றும் சென்னை அப்பலோ மருத்துவமனையுடன் KCGC இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்
சென்னை மண்ணடி , அங்கப்பன் தெருவில் உள்ள மியாசி மேல்நிலைப் பள்ளியில் வைத்து நவம்பர் மாதம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இந்த மருத்துவ முகாமில் சுமார் 400 பயனாளிகள் வருகை தந்து பயனைடைந்தார்கள்.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜனாப் K.A.M.முஹம்மது அபுபக்கர் MLA அவர்கள் இந்த முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்.
KCGC உறுப்பினர்கள்,
சகோ.குளம் இப்றாகிம், சகோ.இப்னு சவுத், சகோ.குளம் முஹம்மத் தம்பி, சகோ.M.M.அஹமது, சகோ.பல்லாக் சுலைமான், சகோ.நெட்காம் புஹாரி, சகோ.சொளுக்கு முஹம்மத் நூஹ், சகோ.கிதுரு முஹைதீன், சகோ.சித்தீக்,
சகோ.அட்வகேட் ஹசன் பைசல்,சகோ.சமீமுல்இஸ்லாம்,சகோ.HNS.சதக்கத்துல்லாஹ்,சகோ.SSM.சதக்கதுல்லாஹ்
மற்றும் சகோ.ஹசன் நெய்னா உட்பட சென்னை வாழ் காயலர்கள் பலரும் இந்த மருத்துவ முகாமிற்கு வந்து சிறப்பித்தார்கள்.
கண் மருத்துவ பரிசோதனை மூலம் 216 பேர் பயன்பெற்றனர். அவர்களுள் 23 பேர் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
40 பேருக்கு கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. 19 பேர் குருதிக் கொடை வழங்கினர்.
மதியம் 1.30 மணி வரை மட்டுமே நடைபெறுவதாக இருந்த இந்த மருத்துவ முகாம் அதிகமான பயனாளிகள் வருகை தந்ததால் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டு வருகை தந்த அனைவருக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
முகாமிற்கான ஏற்பாடுகளை KCGC மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
நிலைப்படம் மற்றும் தகவல்:- சொளுக்கு.M.A.C.முஹம்மது நூஹ்.