தூத்துக்குடி மாவட்டம SDPI கட்சியின் காயல்பட்டிணம் நகரம் சார்பாக நகர்மன்ற பொறுப்பு தனி அதிகாரி சந்திப்பு நடைபெற்றது…
காயல்பட்டிணத்தில் கடந்த பருவமழையில் மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில்கொண்டு இந்த வருடத்தின் பருவமழை காலங்களில் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், பழுதடைந்த சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான தற்காலிகமான முயற்சிகள் எடுப்பதற்கும்,
ப்பரப்பள்ளி குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்துவது மேலும் பெருகிவரும் நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்துவது குறித்த ஏழு விதமான கோரிக்கைகளை 04/11/2016 வெள்ளிக்கிழமை அன்று காயல்பட்டிணம் SDPI கட்சியின் நிர்வாகிகளும், கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் H.சம்சுதீன் தலைமையில் நகர்மன்ற பொறுப்பு தனி அதிகாரி அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்..
இந்த கோரிக்கையை பரிசீலித்து தேவைப்பட்டால் SDPI கட்சியின் செயல்வீரர்களை மழைக்கால அவசர காலங்களில் பயன்படுத்துவதும், முக்கியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாகவும் அதிகாரிகள் வாக்குறுதி தந்தனர். இந்த சந்திப்பில் SDPI கட்சியின் நகர மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
மேலும் SDPI கட்சியின் காயல்பட்டிணம் நகரம் சார்பில் இன்று அனைத்து ஜும்ஆ பள்ளிகளின் மழைக்கால விழிப்புணர்வு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. .
நிலைப்படம் மற்றும் தகவல்: A.முஹம்மது உமர் , நகர தலைவர் , SDPI கட்சி