காயல்பட்டினம் அல்-அமீன் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளியில் இலக்கிய மன்றக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாணவிகள் இஸ்மத் நிஷா, ஆசியா மரியம், மாணவர் இஸ்ஹாக் ஆகியோர் கிராஅத் ஓதினார்கள்.
ஆசிரியை தாஹிரா ரக்கீபா B.Sc அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஜனாப். M.A.புகாரி, M.Com,M,Phill,M,Ed, தலைமை தாங்கினார். ஜனாப் S. ஷேக் அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.
தமிழ், அரபி, ஆங்கில மொழிகளில் மாணவ மாணவியர்களின் பேச்சு, பாடல், உரையாடல், கவிதை ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஜனாப். A.L.முகம்மது நிஜார்,B.A அவர்கள் கலந்து மாணவ மாணவியர்களின் இன்சுவை நிகழ்ச்சிகளை பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சிகளை இலக்கிய மன்ற செயலர் திருமதி,G. மணி மேகலை,B.A,B.Ed, DCE தொகுத்து வழங்கினார்.
இறுதியில் பள்ளி ஆசிரியை S. சங்கரேஸ்வரி,B.B.A நன்றி நவிழ நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துல்லில்லாஹ்.
கூட்டத்திற்கான விரிவான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை செல்வி B.A.பாத்திமா ஆப்ரீன், B.A, DCE உட்பட ஆசிரியைகள் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தகவல்: பள்ளி நிர்வாகம்.