காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவையின் புதிய நிர்வாகக் குழு அண்மையில் அமைந்த பிறகு நகர்நலக் கோரிக்கைகளை வழியுறுத்தி நகராட்சிகள் மண்டல இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர் .இதற்கான செய்திகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் காயல் நகராட்சி தனி அதிகாரி திரு அருள்செல்வன் அவர்களிடத்திலும், சென்னையில் உள்ள நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் அவர்களிடத்திலும், கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர் .
இச்சந்திப்புகளில் பேரவை நிர்வாகிகள் , செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சென்னை சந்திப்பில் சட்டப் பேரவை உறுப்பினர் அல்ஹாஜ் K.M. முஹம்மது அபூபக்கர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்புகளை கீழே காட்சிப் படுத்தியுள்ளோம்.
காயல் நகராட்சி தனி அதிகாரியுடன் பேரவையினர் சந்திப்பு
நகராட்சி இயக்குனருடன் சந்திப்பு
நிலைப்படம் மற்றும் தகவல் : அல்ஹாஜ் அல்ஹாபிழ் வாவு S.A.R. இஸ்ஹாக் அஜ்ஹரி , ஒருங்கிணைப்பாளர் காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை