காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் I. ஆபிதா சேக் அவர்களின் தலைவர் பொறுப்பு , 24-10-2016 நாளை திங்கட் கிழமையுடன் நிறைவு பெறுகிறது .
இந்நிலையில், மக்களைச் சந்தித்து கடந்த 5 ஆண்டுக்கால நகராட்சிப் பணிகள் குறித்த சந்தேகங்களுக்கு விடை தரும் வகையில், அவரது பதவியின் நிறைவு நாள் அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்கிறார் .
இந்நிகழ்ச்சியை மெகா என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது . 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் Municipal Election Guidance Association என்ற பெயரில் துவக்கப்பட்ட இந்த அமைப்பு, நகர்மன்றத் தலைவரை தேர்தலின் போது முன்னிலைப் படுத்தியது.
தேர்தல் முடிந்தப் பிறகு இதன் அங்கத்தவர்கள் நகர்மன்றத் தலைவருக்கு தோன்றாத் துணையாகத் தோள் கொடுத்தனர் .
பின்னர் , 2013 ஆம் ஆண்டு Mass Empowerment Guidance Association என்ற பெயரில் தன்னை மறு அறிமுகம் செய்துகொண்ட இந்த மெகா அமைப்பு, நகர்மன்றத் தலைவருக்கு ஆதரவாக சில பிரசுரங்களை வெளியிட்டதுடன் அலுவலகம் ஒன்றையும் திறந்தது.
இருப்பினும், சில மாதங்களிலேயே அலுவலகம் மூடப்பட்டு , மக்கள் மத்தியில் தொடர்ந்து முகம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டது.
இந்நிலையில், நகர்மன்றத் தலைவருக்கு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்திருப்பதின் மூலம் மீண்டும் அவ்வியக்கம் நகரில் தலைக் காட்டத் துவங்கியுள்ளது .
நகர் மக்களின் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு கடந்த காலங்களில் ஆளாகிய இவ்வியக்கம் ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில், பதவியின் நிறைவில் நகர்மன்றத் தலைவர் அளிக்க உள்ள சந்தேகத்திற்குரிய விளக்கங்களால் ஆகப் போவது என்ன ? என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளதையும் புறம் தள்ளுவதிற்கில்லை .
மொத்தத்தில் நாளைய கூட்டத்தால் நகருக்கு நன்மை ஏதும் இல்லை என்ற விமர்சனம் தான் மக்களிடையே நிலவுகிறது. இருப்பினும் என்ன விளக்கம் தரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
பிரசுரம் : எஸ்.கே.ஸாலிஹ்.(செய்தி தொடர்பாளர், MEGA)