காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் பொருளியல் துறையின் சார்பாக கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான பொருளியல் தொடர்பான போட்டிகள் 07.10.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. தொடக்கவிழா கிராத் ஓதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பானது.
விழாவில் பொருளியல் துறைத்தலைவி திருமதி M. சூரத் ஷீபா M.A., Phil., வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
கல்லூரியின் துணைச்செயலர் ஹாஜி ஹாபீஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக மதுரை அருளானந்தா கல்லூரியின் இணைப்பேராசிரியர் முனைவர் M. மரிய ஜான் கென்னடி M.A., M.Phil., MBA., Ph.D. கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றினார்.
விழாவில் கல்லூரியின் செயலர் ஹாஜி வாவு W.M.M. மொகுதஸிம் BA (CS) மற்றும் கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி Dr. மெர்ஸி ஹென்றி M.A., Ph.D. வாழ்த்துரை வழங்கினார்கள். பொருளியல் துறை உதவிப் பேராசிரியை K. சுமதி M.A., M.Phil., நன்றியுரை வழங்கினார்.
பரிசளிப்பு விழா
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியை S. செய்யது பாதுஷா M.A., M.Phil., வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. நிறைவுரை வழங்கினார்.
பின்னர் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் மாநிலத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பதினொன்று கல்லூரிகள் கலந்து கொண்டன.
போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன முதல் பிரிவான வினாடி வினாப் போட்டியில் சாயர்புரம் போப் கல்லூரி முதல் பரிசு பெற்று வாவு SAR சூழற்கோப்பையை தட்டிச்சென்றது.
இரண்டாமிடத்தை பாளையக்கோட்டை தூய சவேரியார் கல்லூரியும் மூன்றாமிடத்தை திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியும் பெற்றது.
இரண்டாவது பிரிவில் பொருளியல் துறை தொடர்பான போட்டிகளான கட்டுரைப்போட்டி, விவாதப் போட்டி, சூழ்நிலையை சமாளித்தல், மைம் மற்றும் நிலைக்காட்சி ஆகியவை நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதலிடம் பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. இரண்டாமிடத்தை திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் பெற்றன்.
மேலும் போட்டிகளில் முதல் இடங்களை பெற்ற கல்லூரிகளுக்கு பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிறைவு விழாவில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியை L. நூர் அஸ்மா M.A., M.Phil., நன்றியுரை வழங்க துஆ ஓதி நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளியல் துறைத்தலைவி திருமதி M. சூரத் ஷீபா M.A., M.Phil., ஆலோசனையின் பேரில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியைகள் செய்திருந்தினர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: கல்லூரி நிர்வாகம்