பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்த முயற்சிப்பதை எதிர்க்கும் நடவடிக்கைகளை நாடெங்கும் முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
காயல்பட்டினத்தில் இதற்கான நடவடிக்கைகளை காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்பாக பேரவை எடுத்த முடிவுகளை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் இன்று இரவு 7 மணியளவில் பேரவையில் நடைபெற்றது.
நாளைய தினம் ஜூம்ஆ பள்ளிகளில் தொழுகை நிறைவுற்றதும் கையெழுத்து வாங்க வேண்டிய படிவங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டோரில் தேர்வு செய்யப்பட்ட குழுவினரிடத்தில் வழங்கப்பட்டது.
மேலும், நாளைய தினம் பெற வேண்டிய கையெழுத்து குறித்த அறிவிப்பு செய்தும், 28 ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் தெரிவித்தும் , பொது சிவில் சட்டத்தால் உருவாகும் விளைவுகளை பற்றி விளக்கிடவும் வேண்டி , ஜூம்ஆ பள்ளியின் கத்தீபுகளை பேரவையினர் இன்று காலை சந்தித்து கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து கட்சியினர் கலந்துரையாடல்
கையெழுத்து மாதிரி படிவம்
ஜூம்ஆ பள்ளிகளின் கத்தீபுகளை சந்தித்த நிகழ்வு
இச்செய்தியோடு தொடர்புடைய முந்தைய செய்தியைக் காண http://www.kayalconnection.
நிலைப்படம் : சொளுக்கு A.J. முஹைதீன் அப்துல் காதிர்
தகவல்: அல்ஹாஜ் வாவு S.A.R. இஸ்ஹாக் , ஒருங்கிணைப்பாளர் , காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை