காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா முஹம்மது முஹைதீன் பாத்திமா என்ற சின்னாத்தா அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் மர்ஹூம் அ.க. முகம்மது உமர் சாஹிப் அவர்களின் மகன்வழிப் பேத்தியும் , மர்ஹூம் மு.க.அ .ச . முஹம்மது சுலைமான் அவர்களின் மகள்வழிப் பேத்தியும் , மர்ஹூம் உ.ம. முஹம்மது அனுஸுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி S.A.L. ருக்னுத்தீன் சாஹிப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி R.S. அப்துல் வஹ்ஹாப் அவர்களின் மனைவியும் , ஹாஜி A.W. ருக்னுத்தீன் சாஹிப் அவர்களின் தாயாரும் ஆவார்கள்.
மேலும், மர்ஹூம் M.S. முஹம்மது அபூபக்கர் , ஹாஜி M.S. முஹையதீன் தம்பி, M.S. முஹம்மது ஹசன் ஆகியோரின் சகோதிரியின் மகளுமான இவர்கள் , R.S. அப்துல் வஹ்ஹாப் சஹ்ரானி அவர்களின் வாப்பிச்சாவும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் , 28-09-2016 புதன்கிழமை நாளை காலை 8.30 மணியளவில் பெரிய ஜூம்ஆப் பள்ளி மையாவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக ! ஆமீன் .