கடந்த 16.09.2016 (வெள்ளிக்கிழமை) அன்று இலங்கை கொழும்பு நகரில் உள்ள NELUM POKUNA என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் கிராஅத் போட்டி மிக பிரமாண்டமாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இதில் நமதூர் குத்துக்கல் தெருவை சார்ந்த அல்-காரி அல்-ஹாஜ் முஹம்மது அப்துல் காதர் (என்ற) A.T. ஹாஜியார் அவர்கள் இந்த சர்வதேச திருக்குர்ஆன் கிராஅத் போட்டிக்கு (ADJUDICATOR) சிறப்பு நடுவர் தீர்ப்பாளராக ASHRAFF ‘AL QURAN’ RESEARCH ACADEMY சார்பாக அழைக்கப்பெற்றார்கள். கிராஅத் போட்டிகள் மிகவும் சீரும் சிறப்புமாக அரங்கேறியது அல்ஹம்துலில்லாஹ்.
இறுதியாக, இவர்களுக்கு சிறந்த கிராஅத் நடுவர் தீர்ப்பாளராக (BEST ADJUDICATOR) தேர்ந்தெடுக்கப்பட்டு விருது (AWARD) மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள் மாஷா அல்லாஹ். இந்நிகழ்விற்கு பல ஆயிரம் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரசித்தார்கள்.
குறிப்பாக நமதூர் மக்கள் பலர் இதில் கலந்து கொண்டு விருது மற்றும் பரிசுகள் பெற்றவர்களை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.
இந்த சர்வதேச திருக்குர்ஆன் கிராஅத் போட்டியானது இலங்கை அரசு ஒருங்கிணைப்புடனும், ASHRAFF ‘AL QURAN’ RESEARCH ACADEMY சார்பாகவும் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைப்படம் மற்றும் தகவல்: இலங்கையிலிருந்து O .L. ஆரிப், முஹம்மது லெப்பை ஹைதர் அலி