தூத்துக்குடி மாவட்டம ஆத்தூர் SDPI கிளையின் சார்பாக கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி 11/9/16 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு வடக்கு ஆத்தூர் ஆற்றுப்பாலம் சந்திப்பு அருகில் நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூர் SDPI கிளையின் தலைவர் மஜித் தலைமையேற்க, பொருளாளர் சிராஜீதீன் மற்றும் செயலாளர் சுலைமான் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சம்சுதீன் கொடியேற்றினார். இந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு SDPI கடசியின் பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
பின்னர் நடைபெற்ற சிறப்பு கிளை கூட்டத்தில் ஆத்தூரில் சுகாதார சீர்கேடுகளை விளைவிக்கும் கழிவுநீர் தேங்குவதை தடுக்க பருவமழை காலத்திற்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்க பேரூராட்சி மற்றும் மாவட்டாட்சி யரிடம் கோரிக்கையை சமர்ப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
நிலைப்படம் மற்றும் தகவல்: சேக் அஷ்ரப் அலி ஃபைஜி, மாநில தலைவர், SDPI கட்சி – தூத்துக்குடி மாவட்டம்.