இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை
இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அதன் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் மன்ஸிலில் சுதந்திர தின விழா, காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
மூன்றாவது வார்டு மாவட்ட பிரநிதி எம்.கே.முஹம்மது அலி (ஹாஜி காக்கா) நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்காப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ் நன்றி கூரினார்.
நிரைவாக, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தி கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம் இறைப்பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் பதினெட்டாவது வார்டுத் தலைவர் எஸ்.ஆர்.ரஹ்மத்துல்லாஹ், செயலாளர் எஸ்.ஹெச்.பஷீர் அஹமது, பதினொன்று மற்றும் பதிரண்டாவது வார்டு செயலாளர் எஸ்.பதுருத்தீன், இரண்டாவது வார்டு செயலாளர் எம்.ஜெட்.சித்தீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிலைப்படம் மற்றும் தகவல் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை
————————————————————————————————————————————————————————————–
SDPI கட்சி
—————————————————————————————————————————————————————————————
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
இதன் ஒருபகுதியாக , காயல்பட்டிணத்தில் சுதந்திர கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் A.உஸ்மான் தலைமையேற்று மூவர்ணக்கொடியை ஏற்றினார். காயல்பட்டிண யூனிட் தலைவர் H.M.அஷ்ரப் முன்னிலையிலும், SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுச்செயலாளர் H.சம்சுதீன் சிறப்புரை நிகழ்த்தினார்.