கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் K.A.M. முஹம்மது அபூபக்கர் அவர்களின் சட்டமன்ற அலுவலக பொறுப்பாளராக விளங்கும் கடையநல்லூரைச் சேர்ந்த, கவிஞர் கமால் அவர்கள் நமதூர் மஹ்லறாவில் 1979 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை அலுவலராக பணியாற்றியவர் .
மறைந்த மார்க்க மேதை மவ்லவி கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்களின் ஊரைச் சேர்ந்த இவர் , மஹ்லறாவில் பணியாற்றிய அந்நாட்களில் நமதூர் மக்களின் குறிப்பாக இலக்கிய ஆர்வலர்களின் நன் மதிப்பைப் பெற்றவர் .
காயலில் அக்காலக் கட்டத்தில் அதிகமாக இடம்பெற்ற கவி அரங்குகள் , இலக்கிய மேடைகள் , முஸ்லீம் லீக் நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்றவர் . மேலும், பொதுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது மலரும் நினைவுகளாகும்.
இந்நிலையில், 5-08-2016 அன்று காயலில் நடைபெற்ற மாபெரும் முஸ்லீம் லீக் பொதுக் கூட்டத்தில் , காயல் பற்றியும் , காயலர் குறித்தும் , சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்களை வாழ்த்தியும், அவர் புதுக் கவிதையால் புகழாரம் சூட்டிய போது பங்கேற்றோரின் கவனத்தை ஈர்த்தார்
அவர் வழங்கிய புதுக் கவிதையை மகிழ்வுடன் கீழே வழங்கியுள்ளோம்.
பெரிதாகக் காண கவிதை மேல் அழுத்தவும்
———————————————————————————————————————————————————————————————-
இச்செய்தியோடு தொடர்புடைய முந்தையச் செய்தியைக் காண இணைப்பை அழுத்தவும் http://www.kayalconnection.
——————————————————————————————————————————————————————————————
நிலைப்படம் : முதன்மைச் செய்தி முகவர்,kayalconnection.com
கவிதையை தந்து உதவியர் : கவிஞர் கமால்