காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்தவரும் , தற்போது சின்ன நெசவுத் தெரு KMT அருகில் உள்ள வாவு நகரில் வசித்து வந்தவருமான , அல்ஹாஜ் வாவு K.S. முஹம்மது நாசர் அவர்கள் , 13-08-2016 சனிக்கிழமை இன்று அதிகாலை 4.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் வயது சுமார் 71
அன்னார், மர்ஹூம் அல்ஹாஜ் வாவு காதர் சாஹிப் அவர்களின் மகனும், அல்ஹாஜ் வாவு K.S. புஹாரி , அல்ஹாஜ் வாவு K.S. சுலைமான் ஆகியோரின் சகோதரரும் , ஜனாப் வாவு M.N. காதர் சாஹிப் அவர்களின் தந்தையும் ஆவார்கள்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காயல் நகரத் தலைவரான அவர், மிக நீண்ட காலம் முஸ்லீம் லீக் இயக்கம் மற்றும் காயல் முஸ்லீம் ஐக்கியப் பேரவை , காயல் மஹ்லறா , காயல் பைத்துல்மால் போன்ற பல்வேறு அமைப்புக்களில் நிர்வாகியாக பொறுப்பேற்று சிறப்புடன் செயலாற்றிய சேவைச் செம்மலாக திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் , இன்று லுஹர் தொழுகைக்குப் பின் காயல் குருவித் துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .