காயல்பட்டினம் ஷிஃபா மற்றும் உலக காயல் நல மன்றங்கள் இணைந்து அண்மையில் காயல் சென்ட்ரல் மேநிலைப் பள்ளியில் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு பதிவு முகாம் நடத்தினர். அம்முகாமில் சுமார் 300 பேர் வரை பயன்பெற்றனர்.இந்நிலையில், 27-07-2016 புதன்கிழமை இன்று ரெட் ஸ்டார் சங்கத்தில் இரண்டாவது கட்ட முகாம் நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இம்முகாமிற்கு டாக்டர் இத்ரீஸ் அவர்கள் தலைமை ஏற்றார்.
ஷிஃபா வின் செயலாளர் அல்ஹாபிழ் ஹபீப் ரஹ்மான் ஆலிம் பொருளாளர் அஹமது சுலைமான் , நிர்வாகி கண்டி சிராஜுதீன் ,சிங்கை காயல் மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்களாக திரு பிரான்சிஸ் பாரதி, வேல் ஜோதி , மூக்காண்டி ஆகியோர் இம்முகாமில் பொறுப்பாளர்களாக இருந்து பதிவுகளில் கையெழுத்திட்டனர்.
வருவாய்த் துறையைச் சார்ந்த அலுவலர்களான திரு முனியசாமி திரு குமார் திரு கந்தசாமி ஆகியோர் இம்முகாம் சிறக்க துணைப் புரிந்தனர் .
ரெட் ஸ்டார் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் இம்முகாம் வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்பு நல்கினர் .
இம்முகாமில் சுமார் 700 பேர் வரை பயன் பெற்றனர். அடுத்த முகாம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என ஷிஃபா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: முதன்மைச் செய்தி முகவர் ,kayalconnection.com