காயல்பட்டினம் சீதக்காதி திடலில் மின்வெட்டைக் கண்டித்து 18-12-2012 செவ்வாய் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு திமுக நகர செயலாளர் ஹாஜி எம்.டி. ஜெய்னுதீன் தலைமை ஏற்றார்.
முன்னாள் நகரச் செயலாளர் எம்.என் சொளுக்கு, மாவட்டப் பிரதிநிதி பன்னீர் செல்வம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் பி.எம். காதர், நகர மாணவர் அணி அமைப்பாளர் கணேஷ்பதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர அவைத் தலைவர் ஜே.எம். கிதுரு முகம்மது வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்டப் பிரதிநிதிகள், நகர நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், வட்டப்பிரதிநிதிகள், நகராட்சிக் கவுன்சிலர்கள், மாணவர் அணி, இளைஞர் அணியினர், திமுக முன்னோடிகள், உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், அரசைக் கண்டித்தும் பேசினர்.
- அல்லும் பகலும் பொதுமக்கள், அவதிப்படுகிறார் மின்வெட்டால்- ஆவன செய்ய வக்கற்ற அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- கல்வி பயிலும் மாணவர்கள், அகல்விளக்கு ஏற்றும் சூழ்நிலையில்- கடைகள் நடத்தும் வியாபாரியும்-கண்ணீர் வடிக்கிறார் மின்வெட்டால்.
- ஆலை அதிபர்கள் விவசாயி-அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்- அவதிப்படுகிறார் மின் வெட்டால்.
- உருப்படியான திட்டமின்றி – உருவாகிய மின்வெட்டால்- ஊரார் படும் தொல்லைகளை – உடனே நீக்கக் கோருகிறோம்.
- வேண்டும் வேண்டும் மின்சாரம்- வேண்டாம் அரசின் உபதேசம்
போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்.எஸ்.கோபால் நன்றி நவில ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.
நிழற்படம் மற்றும் தகவல்: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com