காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் 14.01.2015 முதல் 19.01.2015 வரை வள்ளுவர் மன்ற 50ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தவிர்க்க முடியாத காரணங்களால் ஓராண்டாக இடம்பெறாத அந்நிகழ்ச்சி பற்றிய செய்தியை இப்போது வழங்குகிறோம். 51-ஆவது ஆண்டு விழா பற்றிய செய்தியை தனியாக வெளியிட்டுள்ளோம்.
இந்நிலையில் 6 நாட்களாக நடைபெற்ற பொன்விழாவில் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றிய செய்தியை மட்டும் கீழே வழங்கியுள்ளோம்.
வள்ளுவர் மன்ற பொன்விழா
18.01.2015 அன்று இரவு 7.00 மணியளவில் காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் வள்ளுவர் மன்ற பொன்விழாவை முன்னிட்டு, திருவள்ளுவர் திடலில் பொன்விழா மலர் வெளியீடு மற்றும் கல்விக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
இந்நிகழச்சிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர்.செ.ராஜன் எம்.டி. தலைமையேற்றார். நகரப் பிரமுகர்கள் பலர் முன்னிலைப் பொறுப்பேற்றனர்.
மன்ற பொருளாளர் திரு.கோ.பிரமானந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்ற அலுவலர்களும், மன்ற முன்னோடிகளுமான திரு.சு.பன்னீர் செல்வம், திரு.த.திருத்துவராஜ் ஆகியோர் மன்றத்தின் மற்றும் அருணாசலபுரத்தின் வரலாறு குறித்து உரை நிகழ்த்தினர்.
கே.வி.ஏ.டி. அரக்கட்டளை நிறுவனர் K.V.A.T.கபீர், வழக்கறிஞர்.ஆர்.சதீஷ்பாலன், காயல் கனெக்சன் அட்மின் காயல்.எஸ்.இ.அமானுல்லாஹ் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
திரு.தொல்.திருமாவளவன் பொன்விழா மலரை வெளியிட முஸ்லீம் லீக் மாவட்டச் செய்லாளர் ஜனாப்.ஜே.மஹ்முதுல் ஹசன் அதை பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்தினார்.
பரிசளிப்பும் சிறப்புரையும்
மாணவ, மாணவிகளுக்க கல்வி சார்ந்த பல்வேறு பரிசுகளை வழங்கி நிறைவாக எழுச்சித் தமிழர் திரு.தொல்.திருமாவளவன் சிறப்புரை நிகழ்த்தினார்.
மன்ற செயலாளர் திரு.பா.ரகுநாதன் நன்றியுரையாற்றினர். மன்ற உறுப்பினர்கள் திரு.கொ.சுந்தரசுமன் M.Com., MBA., திரு.ஆஸாத் ஜவகர் B.Tech., MBA ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.
திரளான மக்கள் இந்நிகழ்ச்சியல் பங்கேற்று சிறப்பித்தனர்.
நகர்மன்ற உறுப்பினர்கள் ஜனாப்.அஸ்ரப், ஹாஜி.சாமு சிகாபுதீன் ஆகியோர் உள்ளிட்ட நகர பிரமுகர்கள் பலர் திருமா அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் நிகழ்ச்சிக் குழுவினர் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.
இவ்விழாவில் திரு.தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையை கேட்க அழுத்தவும்