காயல்பட்டினம் அருணசலபுரத்தில் திருவள்ளுவர் மன்ற 51-ஆவது ஆண்டு விழா நான்கு நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
15.01.2016 முதல் 18.01.2016 வரை மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளுக்கான திரனாய்வுப் போட்டி, விளையாட்டுப் போட்டி, மகளிருக்கான விளையாட்டுப் போட்டி மன்ற உறுப்பினர்களுக்கான விளையாட்டுப் போட்டி ஆகியவை இடம் பெற்றதோடு அரங்க நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இதில் இரண்டு அரங்க நிகழ்வுகள் குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
16.01.2016 சனிக்கிழமை இரவு நடைபெற்ற அருணாசலபுரம் தேசிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு ஊர் மகாசபை செயலாளர் திரு.ஆர்.அன்பழகன் தலைமையேற்றார்.
பள்ளி கமிட்டி உறுப்பினர் திரு.ப.வாசுதேவன், முன்னாள் எல்லைப்படை வீர்ர் மன்ற உறுப்பினர் திரு.எஸ்.பால்ராஜ் பி.எஸ்.சி., ஆகியோர் முன்னிலை வகித்தனர் மன்ற உறுப்பினர் திரு. கே.முகேஷ்குமார் DCE., வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருச்செந்தூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு.எஸ்.சதீஸ்பாலன் M.A.B.L., திரு.தியாகராஜன் D.C.E., இந்திய தபால்துறையைச் சார்ந்த திரு.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியல் வாழ்த்துரை வழங்கினர்.
காயல் கனெக்சன் அட்மின் காயல் S.E.அமானுல்லாஹ் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியல் பங்கேற்றோர் கைத்தரியாடை அணிவிக்கப்பட்ட சிறப்பிக்கப்பட்டனர்.
போட்டிகளில் பங்கேற்றோருக்கு அவையோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
முன்னாள் மாணவ மாணவியர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி
17.01.2016 அன்று இரவு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலர் திரு.த.திருத்துவராஜ் தலைமையேற்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த திரு.க.செல்வம் மற்றும் ஊர் பிரமுகர்கள் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையேற்றனர். திரு.பிரமானந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முஸ்லீம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் மாணவி மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார் .
திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு.அனிதா.ஆர்.ராதாகிருஷ்னண் அவர்கள் மாணவ , மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சித் தலைவர் அவருக்கு கைத்தரியாடை அணிவித்து சிறப்பித்தார்
நிலைப்படம் மற்றும் தகவல் – முதன்மைச் செய்தி முகவர், Kayalconnection.com.