காயல்பட்டினம் அல் அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற பெருமானார் (ஸல்) அவரகள் பிறந்த நாள் உள்ளிட்ட விழாக்கள் குறித்து அவ்வமைப்பினர் வழங்கியுள்ளத் தகவல்
பூமான் நபியின் ஸல்லல்லாஹ் அவர்களின் உதயதின விழா, கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல்காதர் ஜீலானி ரலியல்லாஹீ அன்ஹீ அவர்களின் நினைவுநாள் விழா, அல்-குத்புர் ரப்பானி இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ஷாதுலி ரலியல்லாஹீ அன்ஹீ அவர்களின் நினைவுநாள் விழா, இந்தியா தாய்திருநாட்டின் 67ம் ஆண்டு குடியரசு தின விழா , 28ம் ஆண்டு துவக்கவிழா, ஆகிய விழாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு , எமது அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் மூலம் இனிதே நடைபெற்று நிறைவுப் பெற்றுள்ளது அல்-ஹம்துலில்லாஹ்.
பட்டம்பெற்ற மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி
முதல்-நாள், 25.1.16 திங்கள் கிழமை முகஸ்கருர் ரஹ்மான் மகளிர்அரபிக்கல்லூரியில் பட்டம்பெற்ற மாணவிகளுக்காக பேச்சுப் போட்டி சதுக்கைத்தெரு ரவ்ழதுல் ஜென்னா தைக்கா (முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரி இல்லத்தரசிகள் பாடத்திட்டம்) வில் வைத்து மாண்புநபியின் மறைவான ஞானம் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 18 ஆலிமாகள் கலந்து தங்கள் பேச்சாற்றலை வெளிபடுத்தினர்.
இப்போட்டியின் நடுவர்களாக, குத்பா சிறிய பள்ளியின் கதீபு நஹ்வி முஹம்மது முஹியத்தீன் ஆலிம் மஹ்ழரி , இளைஞர் ஐக்கிய முன்னணியின் முன்னாள் செயலர் காயல் S.E. அமானுல்லா ஆகியோர் பணியாற்றினர்.
குர்ஆன் மஜ்லிஸ்
இதை தொடர்ந்து , 26.1.2016 செவ்வாய்க்கிழமை காலை 5.45மணிக்கு கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் நடைபெற்றது .
தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி
அதனை தெடர்ந்து காலை 8.30மணியளவில் குடியரசுதின விழாவையொட்டி , ஹாஜி மர்ஜீக் அவர்கள் கொடியேற்ற , இந்நிகழ்ச்சிக்கு கலிஃபா முஹம்மது அலி ஆலிம் மஹ்லரி அவர்கள் தலைமை தாங்கினார்கள் . தொடர்ந்து காயல் கலீல் அவர்கள் தேசப்பற்று பாடலைப் பாடினார் .
புனித மவ்லித் மஜ்லிஸ்
அதனை தொடர்ந்து 9.30மணியளவில் பூமான் நபியின் புகழ்பாடும் புனித மவ்லீது சரீப் நடைபெற்றது .
46 மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி
பின்னார் ரவ்ழதுல் ஜென்னா பெண்கள் தைக்கா (முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரி இல்லத்தரசிகள் பாடத்திட்டம்) வில் 15 வயதிற்குப்பட்ட 46 மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி அண்ணல் நபிகள் ஓர் அழகிய முன்மதிரி என்ற தலைப்பில் நடைபெற்றது .
18 மாணவர்கள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி
அதனை தொடந்து மாலை 4.30மணிக்கு பெரிய சதுக்கை வளாகத்தில் நடைபெற்ற 15 வயதிற்குப்பட்ட 18 மாணவர்கள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி பார் உலகம் போற்றும் அண்ணல் நபிகளார் என்ற தலைப்பில் நடைபெற்றது .
நஅத் சரீப்
பின்னர், மாலை 7மணியளவில் முஹியித்தீன் மாணவ மன்றத்தினர்கள் நடத்திய நஅத் சரீப் தப்சுடன் நடைபெற்றது
சன்மார்க்க சொற்பொழிவுகள்
இதனை தொடர்ந்து இஷா தொழுகைக்கு பின் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஃபாயஜ் அஹமுது கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து , மன்றத்தின் செயலாளர் முஹம்மது முஹியித்தீன் , மன்றத்தின் ஆண்டறிக்கையை தொடர்ந்து , பிலால் பள்ளியின் இமாம் நஹ்வி செய்யது சதகத்துல்லா ஆலிம் ஹைரி அவர்களும் அதனை தொடர்ந்து குத்பா சிறிய பள்ளியின் கதீபு நவ்வி முஹம்மது முஹியத்தீன் ஆலிம் மஹ்ழரி அவர்களும் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினர் .
நலத்திட்ட உதவி
9.30மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் இரு பயனாளிகளுக்கு தலா 18,500 மதிப்புள்ள மூன்று சக்கர சுமை வண்டி வழக்கப்பட்டது .
பரிசளிப்பு நிகழ்வும் சேவைச் செம்மல் விருதும்
அதனை தொடர்ந்து , ஆண்கள் பிரிவு பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது . இந்த ஆண்டிக்கான அல்-அமீன் சேவைச் செம்மல் விருது சதுக்கைத் தெருவைச்சார்ந்த மர்ஹீம் சேகு அலி அவர்களின் மகனார் அபூபக்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு குத்பா பெரிய-சிறிய பள்ளிகளின் தலைவர் ஹாஜி அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்க , குத்பா பெரிய-சிறிய பள்ளிகளின் துணை தலைவர் ஹாஜி ஜவாஹிர் அவர்கள் முன்னிலை வகித்து விருதினை வழங்கினார் .
பின்னர் குத்பா சிறிய பள்ளியின் கதீபு நஹ்வி S.A.K. முஹம்மது முஹியத்தீன் ஆலிம் மஹ்ழரி அவர்கள் துவாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
திரளான மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
பெண்கள் நஅத் சரீப் மற்றும் பரிசளிப்பு
பின்னர் 29.1.2016 வெள்ளிக்கிழமை சதுக்கைத்தெரு ஜென்னத்துல் காதிரிய்யா பெண்கள் தைக்கா(மக்தப் முஹியித்தீன்)வில் வைத்து பெண்கள் நஅத் சரீப் நடைபெற்றது . அங்கு , பெண்கள் பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்றோர் உள்ளிட்ட போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் , நஅத் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன .
எங்கள் சங்கத்திற்காக சேவை செய்யும் உறுப்பினர்களின் தாய்மார்கள் மற்றும் மனைவிமார்கள் இப்பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர் . இறுதியாக பாத்திஹா துவா சலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
நிலைப்படம் மற்றும் தகவல் : mohamed mohideen