காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் அண்மையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறின. அதன் தொகுப்பு:
முஃப்லிஹா அரபு மன்றத்தின் சிறப்புக் கூட்டம்
கல்லூரியில் முஃப்லிஹா அரபு மன்ற சிறப்புக் கூட்டம் 19.12.2012 காலை 10.30 மணியளவில் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர்-தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யிது அப்துர் ரஹ்மான் அவர்களின் துணைவியர் திருமதி. ஞானி வஜீஹா பேகம் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி. வே. சசிகலா, M.A., M.Phil., Ph.D., அவர்களும் தலைமை தாங்கினர்.
முதலாமாண்டு கணிப்பொறியியல் மாணவி செல்வி. J.S. ஜஹ்ரா ஃபாயிகா கிராத் ஒத கூட்டமானது இனிதே ஆரம்பமானது. முதலாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி செல்வி. A. ஹலிமா நஸ்ரின் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக திருமதி. S.M.A. ஹைருன்னிசா, ஆலிமா முஅஸ்கரியா, அரபு பேராசிரியை (முஅஸ்க்கர் மகளிர் அரபுக் கல்லூரி) மற்றும் செல்வி. W.M. நஃபிஸா, B.E., அவர்களும் ‘இஸ்லாத்தில் கல்வியும், ஒழுக்கமும்’ மற்றும் ‘குர்ஆன் கூறும் ஒழுக்கவியல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
முதலாமாண்டு கணிப்பொறியியல் மாணவி செல்வி. B. ருக்ஸானா நன்றியுரைக் கூற, முதலாமாண்டு கணிதவியல் மாணவி செல்வி. M. அஹமது ஸூல்ஃபா துஆ ஒத கூட்டம் இனிதே நிறைவுற்றது.
மன்றக் கூட்டத்தை மாணவியர் செயலாளர் இரண்டாமாண்டு கணிதவியல்துறை மாணவி செல்வி. A. பாத்திமா ரிஃப்கா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மன்றத் துணைத்தலைவியும், அரபிக் துறை தலைவருமான திருமதி. S.A.K. முத்து மொகுதூம் பாத்திமா தாரிக் பொறுப்பேற்று நடத்தினார்.
புத்தகக் கண்காட்சி
கல்லூரியில் நூலகத்துறை சார்பாக சிறப்புக் கூட்டமும், புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றன. முன்னதாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் நூலகர் முனைவர். திருமகள் நூல்களின் முக்கியத்துவம், வாசிப்பதன் பயன்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கிப் பேசினார்.
E-Learning வழியாக நூல்களை அறிதலையும் நூல்களைப் பயன்படுத்துவது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர். திருமதி. வே. சசிகலா வரவேற்புரை ஆற்றினார். நூலகர் மும்தாஜ்பேகம் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம் அவர்கள் மற்றும் துணைச் செயலாளர் ஹாஜி ஜனாப் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் அவர்கள் இயக்குநர் முனைவர் மெர்ஸிஹென்றி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் நிறுவனர்-தலைவர் அல்ஹாஜ்வாவு S. செய்யிது அப்துர் ரஹ்மான் அவர்கள் புத்தகக் கண்காட்சியினைத் தொடங்கி வைத்தார். புத்தகக் கண்காட்சி மாணவியரிடையே மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றது.
வணிக நிர்வாகவியல் மன்றக் கூட்டம்
கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்றத்தின் இரண்டாவது கூட்டம் 17.12.2012 அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது.
மன்ற கூட்டத்தை மூன்றாம் ஆண்டு வணிக நிர்வாகவியல் மாணவி P.M.S.L.முகமது தாகீரா வரவேற்றுப் பேசினார். வணிக நிர்வாகவியல் துறைத் தலைவி திருமதி. S.A. ரஹ்மத் ஆமினா பேகம், M.B.A., M.Phil., M.B.A.(HRM) சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் திரு. R. முருகேசன் அவர்கள் முதுகலை வணிக நிர்வாகவியல் (M.B.A) பற்றிய விரிவுரையை’ வழங்கினார். இரண்டாம் ஆண்டு A. மிஸ்பா யாஸ்மின், துணை செயலாளர் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
ஆளுமைத்திறன் – கருத்தரங்கம்
கல்லூரியில் 14.12.2012 அன்று காலை 10.00 மணி அளவில் ஆளுமைத்திறன் (Personality Development) குறித்துக் கருத்தரங்கம் நடைபெற்றது.
வணிக நிர்வாகவியல் துறைத் தலைவி S.A. ரஹ்மத் ஆமினா பேகம், M.B.A., M.Phil., M.B.A.(HRM) வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர். திருமதி. வே. சசிகலா M.A., M.Phil., Ph.D., அறிமுக உரை நிகழ்த்தினார்.
பாளையங்கோட்டை தூய. சேவியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளியல் துறைத்தலைவர் முனைவர் S.V.L. மைக்கேல் அவர்கள் கருத்தரங்கில் தலைமை தாங்கி ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளும் திறன் குறித்து மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு விளக்கி உரையாற்றினார்.
இரண்டாம் ஆண்டு வணிகநிர்வாகவியல்துறை மாணவி K.மிஸ்பா யாஸ்மின் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.
நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழா 16.12.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. தொடக்கவிழாவில் கல்லூரியின் நிறுவனர்-தலைவர் அல்ஹாஜ் வாவு S.. செய்யிது அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார்.
செயலாளர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம் அவர்கள் மற்றும் துணை செயலாளர் ஹாஜி ஜனாப் வாவுS.A.R.அஹமது இஸ்ஹாக் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
முதல்வரும் நாட்டு நலப்பணித்திட்டத் தலைவியுமான முனைவர். திருமதி. வே. சசிகலா அவர்கள் முகாமின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.
திருச்சி பெல். பள்ளியின் முன்னாள் முதுநிலை ஆசிரியர் I. திரவியம் சிறப்புரை வழங்கினார். அம்மன்புரம் ஊராட்சித் தலைவி திருமதி. K. லதா,
துணைத்தலைவர் திரு. R. குற்றாலலிங்கம், ரபேக்காள், சுடலைக்கனி, பாப்பாத்தி ஆகிய உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
மாணவியரையும் தொடக்கவிழாவினையும் கல்லூரியின் பேராசிரியரும் நாட்டுநலப்பணித்திட்ட பொறுப்பாசிரியரும் ஆன திருமதி. இ. சூரத் ஸிபா, செல்வி. கோ. சுபா இருவரும் சிறப்பாக வழிநடத்திச் சென்றனர். முகாம் 22.12.2012 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி: கல்லூரி நிர்வாகம்