திருந்செந்தூர் தொகுதி சட்டமன்றப் பேரவை உறுப்பினர், திரு. அனிதா R. ராதாகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன் தி மு க வில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
ஆளுங்கட்சியான அ தி மு க வில் அவர் மீண்டும் இணைவார் என்றும் , அதற்கான அழைப்பிற்கு காத்திருப்பதாகவும் செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில், தி மு க வில் சிலர் மேற்கொண்ட முயற்சியின் விளைவால் , அவர் மீண்டும் தி மு க வில் இணைவார் என்றே தெரிகிறது.
23-11-2015 நேற்று முன்னிரவில் தி மு க பொருளாளர் திரு மு க ஸ்டாலின் அவர்களை , திரு அனிதா அவர்கள் நீண்ட நேரம் சந்தித்து உரையாடியத் தகவலும் , அதனைத் தொடர்ந்து அவர் மீதுள்ள நடவடிக்கை விளக்கிக் கொள்ளப்படும் என்ற செய்தியும் இன்றைய சென்னை தினசரிகளில் வெளியாகியுள்ளன.
எனவே, அனிதா R. ராதாகிருஷ்ணன் அவர்கள் மீண்டும் தி மு க வில் சேரும் செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம்
தகவலில் உதவி : S.A.K. ஜலீல் , காயல் தி மு க பிரமுகர்