காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் முதல் ஓடக்கரை ஆறு வரை மழை நீர் வடிகால் உள்ளது. புதுப்பள்ளிக்கு மேற்கே தேங்கும் மழை நீர், USC விளையாட்டு மைதானத்திற்கு வடபுறம் தேங்கும் மழை நீர் மற்றும் குறுக்குச் சாலையிலிருந்து (By-Pass Road) கிழக்கு நோக்கி வரும் மழை நீர் ஆகியவைகளை பேருந்து நிலையம் அருகில் உள்ள மழை நீர் வடிகாலோடு இணைக்கும் வடிகால் ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் ரிஜ்வான் சங்கத்திற்கு தென்புற சாலை சந்திப்பிலும், பேருந்து நிலையம் அருகிலும் குழாய்கள் பதித்து தேங்கும் மழைநீர்ரை வடிகாலோடு இணைக்க திட்டமிடப்பட்டது.
இதில் பேருந்து நிலையத்திற்கு வெளியே வடபுறத்திலிருந்து தென்புற வடிகாலில் குழாய் இணைக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இனி ரிஜ்வான் சங்கத்திற்கு அருகில் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
ஒருங்கினைந்த நகர்புற மேம்பாட்டுக் குழுமம் 2012-2013 திட்டத்தின்படி 13.50 இலட்சம் இதற்கென நகர்மன்றம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குழாய் அமைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது.
நிலைப்படம் – முதன்மைச் செய்தி முகவர், Kayalconnection.com
தகவல் – நகராட்சி வட்டாரம்.