காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்தவரும், தற்போது காட்டுத் தைக்காத் தெரு தருவைக்கு வடபுறம் உள்ள, குலாம் சாஹிபு தம்பி தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்தவரும்,
திருமண மற்றும் இதர நிகழ்ச்சிகளின் அழைப்புகளை இல்லங்களில் தகவலாக சேர்க்கும் பணியினை மேற்கொண்டவருமான அடாப் லத்தீப் ஹாஜி என்று அழைக்கப்பட்ட அல்ஹாஜ் N.T. அப்துல் லத்தீப் அவர்கள் இன்று நண்பகல் 12 மணியளவில் நெல்லை மருத்துவமனையில் வைத்து வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் வயது சுமார் 63.
அன்னார், மர்ஹூம் முஹம்மது நூஹு தம்பி அவர்களின் மகனும், ஜனாப் N.T. இஸ்மாயில் அவர்களின் சகோதரரும், A.L. சாகுல் ஹமீது , A.L. முத்து வாப்பா , A.L. காஜா ஆகியோரின் தகப்பனாரும், அல்ஹாஜ் S.M. முஹம்மது பாரூக் ஆலிம் பாஸி அவர்களின் மச்சானும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் இன்று இஷாத் தொழுகைக்குப் பின்னர் குத்பா சிறுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
எல்லாம் வல்ல இறைவன், மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியை அருள்வானாக! ஆமீன்.
தகவல் தொடர்புக்கு : மர்ஹூம் அவர்களின் மகனார் A.L. சாகுல் ஹமீது -கைப்பேசி எண் – 98655 91183