இந்திய இளைஞர்களின் இதயங்களைத் தொட்டவர் , மாணவர்கள் இடையே மறுமலர்ச்சியை உருவாக்கியவர் , லட்சியங்களுக்கு மகுடம் சூட்டியவர், உயர்வான விழுமியங்களை நேசித்தவர், இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தியவர்,
அறிவியல் துறையில் சிகரங்களைக் கண்ட ஆற்றலாளர், சமூக நல்லிணக்கத்தை பேணிக் காத்தவர், இந்திய குடியரசின் மேனாள் தலைவர் மேதகு அப்துல் அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, காயல்பட்டினத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள்.
கடற்கரையில் நடைபெற்ற இரங்கல் கூட்டம்
காயல்பட்டினம் கடற்கரையில் நகர்நலம் நாடும் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் , 30.07.2015 வியாழன் மாலை 5.00 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது
எல்.கே.மேனிலைப் பள்ளி மாணவர் ஹிஷாம். இறைமறை ஓத துவங்கிய இக் கூட்டத்தில் மறைந்த பெருமகனாருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காயல்பட்டினம் பி.ஜே.பி. உறுப்பினர் க.காளிமுத்து,
நகர அம்மா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர்,
புறநகர் சார்பில் இளந்தளிர்.முத்து,
இந்திய தேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் பாக்கர் சாஹிப்,
துபாய் காயல் நலமன்ற பிரதிநிதி லேன்மார்க் ராவண்ணா அபுல்ஹசன் ஹாஜி,
எல்.கே.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.எ.எஸ்.செய்யது அகமது,
முஹிய்யதீன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் A.L. பஷீருல்லாஹ்,
முஸ்லீம் லீக் மாவட்ட நிர்வாகி மன்னர் A.R. பாதுல் அஷ்ஹாப்,
சமுக சேவகர் ஆர்.எஸ்.கோபால்,
கமலாவதி மேல்நிலைப்பள்ளி மாணவி மு.ச.பிரஷா,
நாடார் மக்கள் இயக்கம் சார்பாக சரவணக்குமார் ,
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். .
மேதகு அப்துல் கலாம் அவர்களின் அறிவாற்றல், தியாகம், விடா முயற்சி, நாட்டிற்கு ஆற்றிய தொண்டு , அவர் பேணிக் காத்த சமூக நல்லிணக்கம் இவைகளை மையப் படுத்தி இவர்கள் உரை நிகழ்த்தினர் .
நிகழ்ச்சியினை பொது நல ஆர்வலர் J.A.முஹம்மது லரீப் நெறிப் படுத்தினார்.
தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
திரளாக பொதுமக்கள் பங்கேற்றனர்.
காயலில் கடைஅடைப்பு – வியாழன்கிழமை
மகளிர் கல்லூரியில் மறைந்த அறிஞருக்கு இறை வேண்டல்
காயிப் (GAYIB )ஜனாஸா
மேதகு அப்துல் கலாம் அவர்களின் மறைவை முன்னிட்டு ,31-07-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர், GAYIB ஜனாஸா தொழுகை மொகுதூம் ஜும்ஆ பள்ளி மற்றும் பெரிய சம்சுதீன் ஒலியுல்லாஹ் ஜும்ஆ பள்ளி ஆகியவற்றில் நடைபெற்றன.
நிலைப்படம் : முதன்மைச் செய்தி முகவர்,kayalconnection.com