ரமழான் 1436: சிங்கையில் காயலர்கள் ஏற்பாட்டில் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்!
சிங்கப்பூரில் பெடூக் பகுதியில், காயலர்கள் ஏற்பாட்டில் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் ரமழான் மாதம் முழுக்க இஷா மற்றும் தராவீஹ் தொழுகையை கூட்டாக நிறைவேற்று வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிங்கை கா.ந.மன்றத்தின் ஆலோசகரும், சமூக ஆர்வலருமான ஹாஜி- பாளையம் P.M.A.முஹம்மத் ஹஸன் அவர்களது இல்லத்தில் வைத்து, அன்றாடம் 21.00 மணியளவில், இஷா மற்றும் தராவீஹ் தொழுகை நடத்தப்பட்டு வருகின்றது. காயல்பட்டினத்தை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஹாஃபிழ்கள் ஒருங்கிணைந்து தொழுகையை வழி நடத்தி வருகின்றனர்.
சிங்கையில் பணியாற்றி வரும் இளவயதுடைய ஹாஃபிழ்கள் தாம் மனனம் செய்த திருமறையை நினைவில் தக்க வைத்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக எண்ணி ஆர்வத்துடன் இரவுத் தொழுகையில் பங்கெடுத்து வருகின்றனர். பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்படுள்ளது. நிறைவில் அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் தேனீர் வழங்கி உபசரிக்கப்படுகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நிலைப்படம் மற்றும் தகவல்: ஹிஜாஸ் மைந்தன். சிங்கப்பூர்.