இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக திருப்புமுனையாக அமைந்தது பத்ருப் போர்க் களம் புனித ரமலான் திங்கள் 17ஆம் நாள் அமைந்த, இஸ்லாமியத்தின் வைரிகளாக விளங்கிய தருக்கர்களின் கொட்டம் அடக்கப்பட்ட களம்.
எதிரிகளின் ஆயதங்களுக்கு இமைக்கொட்டாது மார்பு காட்டி, குறைந்த எண்ணிக்கையைக் கொண்டு பெரும் பகையை வென்று வாகை சூடிய களம் இது.
தளபதியாம் தாகா நபியின் (ஸல்) தலைமையில் அணிவகுத்த பத்ருப் படை வரிசையில் இடம் பெற்ற நபித்தோழர்களான பத்ரீன்களை நினைவு கூறும் வகையில், காயலில் இடம் பெற்ற சில நிகழ்ச்சிகளைக் காட்சிப் படுத்தியுள்ளோம்.
மஸ்ஜித் பிலால் பள்ளி:
இப்பள்ளியில் இடம் பெற்ற நிகழ்வில் பள்ளியின் இமாம் ஹாபிழ் N.Y.சதக்கத்துல்லாஹ் ஆலிம் ஹைரி பத்ருக் கள நிகழ்வை, பங்கேற்ற நபித்தோழர்களைப் பற்றிய தகவல்களை விரிவாக எடுத்துரைத்து அவர்களை முன்னிறுத்தி பிரார்த்தனை புரிந்தார்.
புதுப்பள்ளியில்…….
இப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்வில் பத்ரு சஹாபாக்களை முன்னிறுத்தி பிரார்த்தனை செய்யப்பட்டது.
மஸ்ஜித் மீக்காயில் பள்ளியில்…….
இப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்வில் பத்ரு சஹாபாக்களின் புகழ் கூறும் மவ்லித் சரீப் இடம் பெற்று, வீரத்தின் விளைநிலங்களாக விளங்கிய திரு நபியின் தோழர்களை முன்னிறுத்தி பிரார்த்தனை செய்யப்பட்டது.
சிறு நெய்னார் பள்ளியில்…….
இப்பள்ளியில் இடம் பெற்ற நிகழ்வில் குத்பா பெரிய பள்ளியின் கத்தீப் ஹாபிழ் H.A.அஹமது அப்துல் காதிர் மஹ்லரி அவர்களால் பத்ரு களத்தின் வரலாற்று சுருக்கத்தை உரையாக வழங்கப்பட்டது, பின்னர் பத்ரு களத்தில் பங்கேற்ற நபித்தோழர்களின் பெயர் பட்டியலை குறிப்பிட்டு, அவர்களை முன்னிறுத்தி பிரார்த்தனை செய்யப்பட்டது.
நிலைப்படம்: A.R.சேக் முஹம்மது.
பிலால் பள்ளி நிலைப்படம் : பிரபு சுல்தான் ஜமாலுதீன்