சிவந்தி ஆதித்தனார் செவிலியர் மாணவியர்களுக்கு துளிரில் சிறப்பு குழந்தைகள் பற்றிய பயிற்சிப்பட்டறை திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் 3ஆம் ஆண்டு மாணவிகள் 40 பேர்,
மனவளர்ச்சி குறைபாடு, முளை மூடக்கு வாதம், புறஉலக சிந்தனையற்ற குழந்தைகளின் நிலையினையும் அவர்களை அடையாளக் காண அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி அறிந்துகொள்வதற்காக 23.03.2015 அன்று துளிர்; சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் பேராசிரியர்கள் மெர்பா கிறிஸ்டி, செல்வகுமாரி ஆகியோர் தலைமையில் வருகை தந்தனர்.
துளிர் நிறுவனர் வக்கீல் அஹமது தலைமையில் காணொலி கூடத்தில் செவிலியர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. துளிர் குழந்தைகளின் இறைவணக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
துளிர் பள்ளியின் செயலர் எம்.எல்.சேக்னா லெப்பை வரவேற்புரை வழங்கினார்.வருகை தந்த அனைவரும் தங்களை சுயஅறிமுகம் செய்து கொண்டனர்.
துளிர் பள்ளியின் சிறப்பாசிரியர் திருமதி. ரேவதி மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளை அடையாளம் காண்பது பற்றியும் அவர்களை பயிற்சிவிக்கும் முறையினையும் உதாரணங்களுடன் விளக்கி கூறினார்.
சிறப்பாசிரியர் திருமதி.பாக்கியலஷ்மி ஆட்டிஸம், (புற உலக சிந்தனையற்ற குழந்தைகள்) சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களை கையாளரும் முறைகளை பற்றியும் விளக்கி கூறியதோடு நடத்தை ஒழுங்குமுறைகளை (Behaviour Management ) சரிசெய்வது பற்றிய் பயிற்சி முறைகளை விளக்கி கூறினார்.
நிறுவனர் வக்கீல் அஹமது துளிரில் செயல்பாடுகளை குறித்து விளக்கியதோடு சிறப்புக் குழந்தைகளின் இன்றைய சமுக நிலைகள்; அவர்களிடம் எவ்விதமான அணுகுமுறைகளை பின்பற்றுவது என்பது பற்றி கூறியதோடு மனவளர்ச்சி குறைபாடுள்ள, முளை முடக்குவாதம் ஆட்டிஸம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வு முறைகளை பற்றி காணொலி மூலம் விளக்கி கூறினார்.
செவிலியர்கள், நோயாளி மருந்துவரை காணும் முன்பு அவர்களை அணுகி நோயின் தீவிரத்தை முதலில் கண்டறிந்து அரவணைப்புடன் நம்பிக்கையினை அவர்களுக்கு வழங்கும் அற்புதமான பணியினை செய்பவர்கள் என்றும்,
இந்த அர்பணிப்பு ‘தன்னலமற்று செயல்படுவதற்கு அறிய பல உதாரணங்களை கூறியதோடு’ இந்த வருடத்தில் செவிலியர் பயிற்சியினை நிறைவு செய்யும் மாணவியர்களான நீங்கள் தாங்கள் பணியில் சிறந்து விளங்கி ஒவ்வொரு மாணவியரும் சேவையில் பிளாரன்ஸ் நைட்டிஙகேளாகவும் கருணையில் அன்னைதெரஸாவாகவும் விளங்கி புகழ்பெற துளிரின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முறையான பயிற்சி பெற்ற நீpங்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களுக்கு மாறிச் சென்றாலும். சேவை மனம் மாறாமல் பணியாற்ற வேண்டும் என்றும் தனது உரையில் கூறினார். செவிலியர் மாணவியர்கள் துளிரின் பயிற்சி வகுப்புகள், இயல்முறை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு இயலா நிலைக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறைகளை; நேரடியாக தெறிந்து கொண்டதோடு,
அவர்களுக்கு சிறப்பு குழந்தைகள் பற்றி ஏற்பட்ட அனைத்து சந்தேகக் கேள்விகளுக்கு சிறப்பாசிரியர்கள் மூலம் விளக்கம் பெற்றனர்.
செவிலியர் மாணவிகள் துளிர் குழந்தைகளுடன் இணைந்து இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி குழந்தைகளோடு குழந்தையாக மகிழ்ந்தனர்.
இறுதியாக நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரியின் பேராசிரியர் மெர்பா கிறிஸ்டி பேசும் போது துளிரின் செயல்பாடுகள் தங்களை நெகிழச் செய்ததாகவும் இந்த நாளில் சிறப்பு குழந்தைகள் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் ,
அதற்கு துளிரின் நிர்வாகத்தினருக்கு மிகவும் நன்றி என்றும் கூறியதோடு இந்த பயிற்சியினை எங்கள் செவிலியர் மாணவியருக்கு பெறுவதற்காக துளிரினை தேர்வு செய்தமைக்கு எங்கள் செவிலியர் மாணவியர் சார்பாக சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் முதல்வருக்கு நன்றியினையும் தெரிவித்தனர்.
நிலைப்படம் மற்றும் தகவல் : Thulir School