Blossoms கோப்பைக்கான வீ-யூனைடெட் KPL போட்டியில் பங்கேற்க 6 தினங்களில் 69 வீரர்கள் முன்பதிவு! மேலும் வீரர்களின் பதிவை வரவேற்கிறது வீ-யூனைடெட்!!
Blossoms கோப்பைக்கான வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் வருகின்ற மே மாதம் நடைபெற உள்ளன.
பிளாஸம்ஸ் கோப்பைக்கான வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் மே 25-ம் தேதி நடைபெறும் என கடந்த 11-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததும், வீரர்களின் சுயவிபரம் சேகரிக்கும் விண்ணப்பம், முதல் முறையாக இவ்வாண்டு ஆன்லைனில் கடந்த 22-ந் தேதி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் விண்ணப்ப முறை வீரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விண்ணப்பம் வெளியிடப்பட்ட மார்ச் 22 முதல், மார்ச் 27 வரையிலான 6 தினங்களில் 69 வீரர்கள் தங்களது சுயவிபரங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 6 ஆண்டுகளாக தனிசிறப்புடன் நடைபெற்று வரும் KPL போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் தங்களது சுயவிபரங்களை,http://vunited.org/eng/kpl/kpl-futbal/futbal-application/16/4/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
தகவல் : Ali Faizal , Hong Kong