திருச்செந்தூர் வக்கீல் S.கிலீஸ்குமார் , நோட்டரி பப்ளிக் – சான்றுறுதி அலுவலர் ஆனார். நெல்லை சட்டக்கல்லூரியில் 2002ம் ஆண்டு சட்டப்படிப்பினை முடித்த இவர் மதுரை மற்றும் திருச்செந்தூர் வழக்காடு மன்றத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 27.02.2015 அன்று முதல் தூத்துக்குடி மாவட்ட அளவிலான நோட்டரி பப்ளிக்காக- சான்றுறுதி அலுவலராக மத்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் T.B. ரோடு உதயம் ஹொட்டல் பின்புறம் இவரது வக்கீல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. விரைவில் தாலூகா அலுவலகம் அருகில் அலுவலகத்தை மாற்றவிருக்கிறார்.
சான்றுறுதி பெற விரும்புவோர், இவரது தொலைபேசி எண்ணோடு தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று வர வேண்டுகிறார் தொலைபேசி எண்கள் : 94860 24 688 , 91710 0067
இவர் ஓர் சமூக சேவகர் .காயல்பட்டினத்தில் நிறைய நண்பர்கள் உண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்புரையாற்றியிருக்கிறார்.
மாற்றுத்திறனாளியான இவர், மாற்றுத்திறனாளி நலனுக்காக பல்வேறு சேவைகளாற்று வருகிறார். வட்டார அளவில் இலவச சட்ட சேவைகளை புரிந்திருப்பதோடு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு முகாம்கள் பல நடத்தியிருக்கிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித கட்டணமுமின்றி சட்ட உதவிகள் செய்து வருகிறார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியினை வாவு வஜிஹா வனிதையர் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்காக பல வருடமாக நடத்தி வருகிறார். துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியின் ஆரம்ப கால ஆலோசகர்களில் இவர் முதன்மையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் .
நிலைப்படம் மற்றும் தகவல்: M.I.அஹ்மது, தீபி.GEM PRINTERS, J.முகம்மது லரிஃப்