மாண்புமிகு. முன்னாள் முதல்வரும், ஆளுங்கட்சியனரால் மக்கள் முதல்வர் என்றும், புரட்சித் தலைவி என்றும் அன்போடு அழைக்கப்படுபவருமான டாக்டர். செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் 67-ஆவது பிறந்தநாள் விழா காயல்பட்டினத்தில் 24-02-2015 அன்று பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்றது .
நகர அம்மாப் பேரவை மற்றும் அ.தி.மு.க. நகர சிறுபான்மை பிரிவு ஆகியவைகளின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு , அக்கட்சியின் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் எம்.ஜே. செய்யது இபுராகிம் தலைமையேற்றார்.
இந்நிகழ்சியில் நகர அம்மா பேரவை செயலாளர் அல்ஹாஜ். எல்.எஸ்.அன்வர் வரவேற்புரை நிகழ்த்தினர்.
ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர் அல்ஹாஜ்.காயல் மௌலானா
பூந்தோட்டம் கணேசன்
ச.மா.க. நிர்வாகி உள்ளிட்ட சிலர் உரைநிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அமலிராஜன், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் எம்.ராம்ச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி மனோகரன்,
ஓடை சேகர், அக்கட்சியின் நகர அவைத்தலைவர் என்.பி.முத்து, நகர சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் என்.எம்.அகமது, அப்பரிவின் செயலாளர் அல்ஹாஜ். எஸ்.எம்.அப்துல் காதர் என்ற சின்னத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை, முதியோர் இல்லம் மற்றும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி ஆகியவற்றிற்கு மதிய உணவாக சுமார் 300 நபர்களுக்கு கோழி பிரியாணி வழங்கப்பட்டது.
ஹாஜி.அக்பர்ஷா 3-ஆவது தெருவிற்கு அருகில் 67 மரக்கன்றுகள் நடப்பட்டன.
முன்னதாக காலை 9.00 மணியளவில் மாநில மீனவர் அணி செயலாளர் எஸ்.ஜெனிபர் சந்திரன் சாகிபு அப்பா தைக்காவில் சிறப்பு பிரத்தனை புரிந்தார்.
மாலை 5.00 மணியளவில் 15-வது வார்டு குறுக்குச்சாலையில் (பைபாஸ் ரோடு) முன்னாள் நகர்மன்றத் தலைவர் எ.வஹிதா அ.தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
இவ்வனைத்து நிகழ்ச்சிகளிலும் அக்கட்சியின் நிர்வாகிகள், 13 வார்டு செயலாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
நிலைப்படம்: venus Iyyappan
நிலைப்படத்தில் உதவி : முதன்மைச்செய்தி முகவர், Kayalconnections.com.
தகவல்: நகர அம்மா பேரவை செயலாளர் அல்ஹாஜ். எல்.எஸ்.அன்வர்.
காயல் நகர்மன்றத் தலைவர் பங்கேற்று,முன்னாள் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஐக்கிய பேரவையினரை விமர்சித்தும் இன்னும் சிலரை கண்டித்தும் ஆற்றிய உரை இடம் பெற்ற , அம்மா பிறந்த நாளின் பிரிதொரு நிகழ்ச்சி பற்றிய செய்தி அடுத்து வெளியிடப்படும் .