தன்னந்தனியாக கொடியேற்றி 5 மணி நேரம் உரை நிகழ்த்திய 88 வயது காமராஜர் தொண்டர் ஆறுமுகநேரியில் நடந்த குடியரசு தின கொண்டாட்டம்.
ஆறுமுகநேரி லெட்சுமிமாநகரத்தை சேர்ந்தவர் த.ஐ.சிவராஜா (88). காந்தியவாதியும், காமராஜரின் தொண்டருமான இவர் தற்போது காங்கிரஸ் மகாசபை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன்மூலம் ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காந்தி ஜெயந்தி விழா, காமராஜர் பிறந்த தின விழா ஆகியவற்றை தவறாமல் கொண்டாடி வருகிறார்.
இதன்படி , ஆறுமுகநேரி பஜாரில் குடியரசு தின விழாவை சிவராஜா கொண்டாடினார். அப்போது தன்னந்தனியாக அவரே கொடியேற்றி சிறப்புரையும் ஆற்றினார். காலை 9 மணிக்கு மைக்கில் பேசத்தொடங்கிய அவர், உள்ளுர் அரசியல் முதல் உலக அரசியல் வரை இடைவிடாமல் மதியம் 2 மணி வரையில் பேசி சாதனை படைத்தார்.
இதனைக் கண்டு ஆறுமுகநேரி பகுதி மக்கள் வியந்துபோயினர். எவரும் இல்லாமல் ஒருவர் மட்டும் மைக்கில் தனியாக பேசிக்கொண்டு இருக்கிறாரே என்று அவ்வழியாக பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோரும் வினோதமாக பார்த்தபடி சென்றனர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: S. பார்த்திபன் ,ஆறுமுகநேரி