காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் சேரும் மக்கும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயற்கை எரிவாயு மையம் அமைக்க பணியாணை (Work Order) இன்று மாலை வழங்கப்பட்டது .
ருபாய் 85 லட்சத்து 52 ஆயிரத்து 526 ஒப்பந்தப் புள்ளிக்கு, சேலத்தைச் சேர்ந்த S.K.& Co நிறுவனத்தின் உரிமையாளர் திரு . சுந்தரவதனம் பணியானையை பெற்றுக் கொண்டார்.
நகரமைப்பு ஆய்வாளர் திரு. அறிவுடை நம்பி இந்த பணியாணையை வழங்குகையில், நகராட்சிப் பணி மேற்பார்வையாளர் திரு சுதாகர் , நகர்மன்றத் துணைத் தலைவர் S.M.முஹைதீன் , டெண்டர் கமிட்டி உறுப்பினர் பதருல் ஹக் உடன் இருந்தனர் .
தடை முயற்சிகள் , தாமதப் படுத்தும் நடவடிக்கைகள் போன்றவைகளால் சிலரின் எண்ணம் ஈடேறுமா ? அல்லது அவைகளையும் மீறி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டப் படி உரிய இடத்தில் இது செயல் வடிவம் பெறுமா ?
மாண்புமிகு முன்னாள் முதல்வர் அவர்களால் வழங்கப்பட்ட இத்திட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதை அரசு அனுமதிக்குமா ?
இக்கேள்விகளுக்கான விடையைப் பொறுத்து இருந்து பார்ப்போம் .
நிலைப்படம் : kayalconnection .com க்காக வீனஸ் மணி