இந்திய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு (சர்வதேசம் )
Human Rights Protection Organisation of India(International Organisation -Regd)
இந்த அமைப்பு, சென்னை மற்றும் உலகின் சில இடங்களில் இயங்குகிறது . இதன் இரண்டாவது தேசிய எழுச்சி மாநாடு சென்னை புனித தெரசா மெட்ரிக் குலேசன் பள்ளி வளாகத்தில் 29-11-2014 அன்று நடைபெற்றது.
HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் , தாய்மார்களுக்கும் , அநாதை குழந்தைகளுக்கும் மற்றும் ஏழை எளிய பெண்களுக்கும் நல உதவிகள் வழங்கும் விழாவாக நடைபெற்ற இம்மாநாட்டிற்கு, இந்த அமைப்பின் தலைவர் திரு P.N.K. இந்தியன் MBA., M.A., D.P.A., தலைமை ஏற்றார் .
இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக மாண்புமிகு நீதி அரசர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியர் , உயர் அதிகாரிகள் பங்கேற்று விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினர் .
40 ஆண்டு காலத்திற்கு மேலான பொது வாழ்க்கைக்கு உரித்தானவரும் , அண்ணா தி மு க வின் மிக மூத்த உறுப்பினரும் , சிறந்த பேச்சாளரும் , 1989 ஆண்டு நடைபெற்ற சட்ட பேரவை தேர்தலில் அ தி மு க வின் சார்பில் போட்டியிட்டவரும் . பல்வேறு பொது அமைப்புகளில் அங்கம் வகித்தவரும், வகிப்பவரும் ,
காயல்பட்டினத்தில் அனைவருக்கும் அறிமுகமானவருமான அல்ஹாஜ் காயல் மவ்லானா அவர்கள் இம்மாநாட்டில் கவுரவிக்கப்பட்டார் .
இவரின் சமூக சேவையை பாராட்டி பாரத ஜோதி என்ற விருதினை வழங்கி கவுரவித்ததோடு இந்த அமைப்பின் மாநில அமைப்பு செயலாளராக இவரை நியமித்தும் சிறப்பித்துள்ளார்கள்.
நெல்லை தினத்தந்தி 11-12-2014:
சென்னை மாலை முரசு 07-12-2014:
மாநில பொறுப்பினையும் , விருதினையும் பெற்றுள்ள அல்ஹாஜ் காயல் மவ்லானா அவர்களின் பொதுப்பணி தொடரவும் , சிறக்கவும் வாழ்த்துகிறோம்.
நிலைப்படம் மற்றும் தகவல் :Human Rights Protection Organisation of India, Chennai