துபாய் காயல் நலமன்றப் பொதுக்குழு கூட்டம் 30-11-2012 மன்றத் தலைவர் ஹாஜி J.S.A. புஹாரி தலைமையில் நடைபெற்றது.
ஹாஜி A.T.அப்துல் காதர் இறைமறை ஓத துவங்கிய கூட்டத்தில் மன்றத்தின் ஆண்டறிக்கையை செயலாளர் யஹ்யா மொஹியதீன் புள்ளி விபரத்துடன் படித்தளித்தார்.
பின்பு, மன்றத்தின் தலைவர் ஹாஜி J.S.A. புஹாரி சிறப்புரை ஆற்றும் போது, மன்றத்தின் செயல்பாடுகள் மென்மேலும் செழித்தோங்க, இளைய தலைமுறையினர் தாமாகவே முன்வந்து தங்களின் திறமைகளையும், மேலான ஆலோசனைகளையும் அளிப்பதோடு மன்றத்தின் வேலைகளிலும் தங்களின் பெரும் பங்களிப்பை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் கூட்ட நிகழ்வின் இடமாற்றத்தால் ஏற்படும் நிர்வாகக் குறைகள் மற்றும் செயலாற்றலில் ஏற்படும் குறைகளை பொருத்து கூட்டம் நல்ல முறையில் நடந்தேற எல்லோர் ஒத்துழைப்பையும் கோரினார்.
முக்கியமாக தாயகத்தில் ஒரு அமைப்பை உருவாக்கி, நமதூரிலிருந்து வேலைதேடி வரும் பட்டதாரிகளை நேர்காணல் மூலம், அவர்களின் தகுதி நிர்ணயம் செய்து மன்றத்தினருக்கு பரிந்துரை செய்தால் இங்குள்ள தொழில் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க முயற்சி மேற்க்கொள்ளப்படும் என்றும் வருங்காலத்தில் ஏனைய காயல் நல மன்றங்களும் இந்த முறையை அறிமுகப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டதோடு, இந்த முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த ஆவன ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
தங்களின் சொந்தங்களை காண அமீரகம் வந்திருந்த ஹாஜி A.T.அப்துல்காதர் , ஹாஜி பிரபு மரைக்கார் சாஹிப் மற்றும் ஹாஜி A.K.S. ஷாபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் தங்களது உரையில், மன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டியதோடு, ஆண்டறிக்கையில் மன்றத்தால் வழங்கப்பட்ட உதவிகளை கேட்டு வியப்படைவதாகவும், மன்றத்தினரின் ஒற்றுமைக்கும் பிரார்த்தித்திப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது நமதூர் எதிர்கொண்டிருக்கும் எப்படிப்பட்ட சவால்களையும் நமது ஒற்றுமையால்தான் எதிர்கொள்ள முடியும் என்றனர்.
மன்றத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர், மூத்த உறுப்பினர் நூஹு சாஹிப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு மன்றத்தின் இலைச்சினை பொதித்த கப் ( MUG ) வழங்கி கௌரவித்தனர்.
அபு தாபி காயல் நல மன்றத்தினர் வெளியிட்ட மருத்துவ கையேட்டின் பிரதிகள் வருகைபுரிந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன. பின்னர் புதிய உறுப்பினர்களின் அறிமுகம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கருத்துக்கள் கோரப்பட்டன.
மண மணக்கும் காயல் அகணி பிரியாணி ( வெள்ளை பிரியாணி ) , சம்பல் மற்றும் பச்சடி பரிமாறப்பட்டது. மதிய உணவிற்குப்பிறகு உறுப்பினர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.
அஸர் தொழுகைக்குப்பிறகு தேநீர் சமூசா பரிமாறப்பட்டது. மாலையிலும் மழை தொடர்ந்ததால் வேறு எந்த நடவடிக்கைகளும் இல்லாததால், மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர M.U. முஹம்மத் அலி நன்றி கூற, அவுலியா முஹம்மத் இபுராஹீம் துஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
பெண்கள் பகுதியில் வேடிக்கை வினோத விளையாட்டுக்கள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுக்குழு நினைவுப்பரிசாக ‘கப் ( MUG ) எல்லா பெண்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அதே போலே சிறார்களுக்கு, ( ‘கேம் அங்கிள் ‘ என்று எல்லா சிறார்களாலும் செல்லமாக அழைக்கப்படும் ) மன்றத்தின் துணை தலைவர் சாளை ஸலீம் அன்பளிப்புகளை வழங்கினார்.
மழை காரணமாக எந்த விளையாட்டு நிகழ்சிகளும் நடை பெறாததால் சிறார்கள் பெரிய ஏமாற்றம் அடைந்தார்கள்.
பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளை தலைவர் சாளை ஷேக் ஸலீம் மற்றும் செயலாளர் யஹ்யா முஹியதீன் நெறிப்படுத்தினர்.
கூட்டம் நடைபெற ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் கூட முடியாத அளவிற்கு எதிர்பாராத மழை வருகையால், உரிய நேரத்தில் உடனடியாக மாற்றிடம் ஏற்பாடு செய்யப்பட்டு இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மழையினால் பெரும் இடையூறு ஏற்ப்பட்டாலும் ஒருங்கிணைப்பாளர்களின் சமாயோசித முடிவாலும் துரித நடவடிக்கையாலும் நடந்த நிகழ்வுகள் மன நிறைவாக இருந்தது என்று கூட்ட ஏற்பாட்டாளர்களையும் தன்னார்வ தொண்டர்களையும் வருகை புரிந்த அனைவரும் பாராட்டிய வண்ணம் களைந்து சென்றனர்.
தகவல்/நிழற்படங்கள்: சாளை ஷேக்ஸலீம், துணை தலைவர், துபாய் காயல் நலமன்றம், அமீரகம்
Admin: துபாய் காயல் நலமன்ற பொதுக்குழு செய்தி எதிர்பாராத விதமாக எமது கவனத்திற்கு தாமதமாய் வந்ததால் இச்செய்தியை சற்றுத் தாமதமாய் வெளியிட்டுள்ளோம்.