எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது அபூதபீ காயல் நலமன்றத்தின் ஐந்தாவது பொதுக்குழு ஒன்று கூடல் நிகழ்ச்சி நவம்பர் 07 ஆம் நாள்வெள்ளிக்கிழமையன்று, பழைய ஏர்போர்ட் ரோடு, அல்நூர் மருத்துவமனை அருகில், K.F.C. பூங்காவில் சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
நிகழ்வு நாளன்று காலை 10.00 மணி துவங்கி, ஜும்ஆ தொழுகைக்கு முன்பு வரை டாக்டர் S. செய்யித் அஹ்மது மற்றும் டாக்டர் H.M. ஹமீது யாசிர் ஆகியோர்களின் ஒருங்கிணைப்பில் இலவச இரத்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் அபூதபீ காயல் நல மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் M.A ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி, அவர்களின் தலைமையில் மன்றத்தின் கவுரவ தலைவர் அல்ஹாஜ் I. இம்தியாஸ் அஹ்மது,
மற்றும் துபாய் காயல் மன்றத் தலைவர் J.S.A. புஹாரி ஆகியோர்கள் முன்னிலை வகிக்க, சகோதரர் S.A.C ஹமீது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். துவக்கமாக ஹாஃபிழ் H.L. இஜ்ஜத் மக்கி அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
மன்றத்தின் அழைப்பினை ஏற்று குடும்ப சகிதம் வருகை தந்த அணைத்து நிர்வாககுழு, பொதுக்குழு உறுப்பினர்கள், துபாய்காயல் நல மன்றத் தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அனைவர்களையும் மக்கள் தொடர்புசெயலர் A.R. ரிபாய் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் M.A. ஹபீப் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி அவர்கள் சலாம், முகமன் வாழ்த்துக்களைக் கூறி உறுப்பினர்களை வரவேற்று தமது ரையைத் துவக்கிய தலைமையுரையில் உறுப்பினர்களுக் கிடையே ஒற்றுமையுடன் கூடிய செயல்பாடுகளை வலியுறுத்தியும்,
மற்ற காயல் நல மன்றங்களுடன் இணைந்து நடத்திய ரமலான் இலவச உணவு பொருள்கள் விநியோகம், இலவச இரத்த சோகை முகாம் போன்றவைகளை நினவு படுத்தி, கடந்த ஆண்டை போன்று இவ்வாண்டும் செயற்குழு உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக செயலாற்றிடவும், கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள சந்தா தொகை களை உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து
மன்றத் தின் நகர் நலப்பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற உதவிட வேண்டும் என்று கேட்டு கொண்ட தோடு மன்றத்தால் நடத்தப்படும் கூட்டங்களில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டிய தன் அவசியம் குறித்தும் தமதுரையில் பேசினார்.
சிறப்பு அழைப்பாளர் உரை:
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய துபாய் காயல் மன்றத் தலைவர் J.S.A. புஹாரி காக்கா அவர்கள் தனக்கே உரித்தான நகைச் சுவைபாணியில் பல்வேறு சிறப்பு அம்சங்களையும், பல ஆலோசனைளையும் வழங்கி,
இம்மன்றம் துவங்க காரணியாக தாம் இருந்ததை நிணைவுபடுத்தி அபூதபீமன்றம் சமூக பணியில் முன்னோக்கி செல்வதாய் புகழ்ந்து, உறுப்பினர்கள் மென்மேலும் சிறப்புற பணியாற்ற பண்போடு கேட்டுக் கொண்டார்.
சிறப்புப்பரிசு:
துபாய் காயல் நலமன்றத்தின் தலைவர் J.S.A. புஹாரிகாக்கா அவர்களுக்கு, எம்மன்றத்தின்கவுரவதலைவர்I. இம்த்தியாஜ் அஹ்மது, மன்றத்தின் தலைவர் M.A. ஹபீப் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி ,துணைத் தலைவர் M. மக்பூல் அஹ்மது ஆகியோர்கள் சேர்ந்து, அபூதபீ மன்றத்தின் சார்பாக சிறப்பு பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினர்.
மன்ற ஆண்டறிக்கை:
மன்றம் இதுவரை ஆற்றிய உதவிகளையும், மன்றத்தின் செயல்பாடுகளையும் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், மன்ற நடவடிக்கைகள் குறித்து மன்றத் துணைச் செயலாளர் ஜனாப் K. ஹுபைப் அவர்கள் விரிவாக விளக்கினார்.
மருத்துவச் சிற்றுரை:
மருத்துவம் சார்ந்த தெளிவுகளையும் உறுபினர்களின் உடல்நலம் குறித்த வினாக்களுக்கும ருத்துவ முன்னோட்டம் என்றத லைப்பில் டாக்டர்H.M . ஹமீத் யாசிர்அவர்கள் சிற்றுரை தந் துஅவையோரை சிறப்பித்தார்.
அதனை தொடர்ந்து சரியாக 2 : 10 மணிக்கு, மதிய உணவு ஹைதராபாத் பிரியாணி பரிமாற்றப்பட்டது. சற்று ஓய்வுக்குப் பின் பிற்பகல் 3 மணிக்கு 2 – வதுஅமர்வு துவங்கியது.
புதிய நிர்வாகக் குழுத் தேர்வு:
அல்லாஹ்வின்உதவியால்மூன்றுவருடங்களைபூர்த்திசெய்யவிருக்கும்மன்றத்திற்குபுதியநிர்வாகிகளைஜனநாயகமுறைப்படி தேர்வு செய்யும் அமர்வு துவங்கியது.
புதிய நிர்வாககுழு உறுப்பினர்கள்:
கவுரவ தலைவர் :அல்ஹாஜ் I. இம்தியாஸ் அகமது.
தலைவர்: ஹாபிஃழ் M.A ஹபீபு ர்ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி.
துணைத்தலைவர் : ஜனாப்.S.A.C ஹமீது.
செயலாளார்: ஜனாப்.V.S.T. ஷேக்னாலெப்பை.
இணைப்செயலாளார்: ஜனாப்.K. ஹுபைப்.
பொறுளாளர் : ஜனாப். P.M.ஹுசைன் நூர்தீன்.
இணைப்பொறுளாளர்கள்: 1. ஜனாப்.M.O. அன்ஸாரி.
2. ஜனாப்.N.K.அபுஹுரைரா.
மக்கள்தொடர்புசெயலர்: ஜனாப்.A.R. ரிபாய்.
செய்தி மற்றும் ஊடகம்: ஜனாப்.M.E. முகியதீன் அப்துல்காதர்.
புதிய செயற்குழு உறுப்பினர்கள்:1. ஜனாப். L.T. இப்ராஹீம்.
2 .ஜனாப்.சாலை தாவுது நைனா.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப்ப ரிமாற்றம் செய்யநேரம் ஒதுக்கப்பட்டது. அதில், நம் மன்றவருங்கால செயல் திட்டங்கள் மற்றும் ஊரின் பொது நடப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
பணி நிமித்தம் மற்றும் வேலை வாய்ப்புக்காக அபுதாபி வந்துள்ள புதிய உறுப்பினர்கள் தங்களை இந்நிகழ்வில் அறிமுகம் செய்து கொண்டனர்.
வினாடி- வினா போட்டி:
அஸர் தொழுகைக்குப்பின் அழகிய வினாடி- வினாபோட்டி நடைபெற்றது. பத்து நபர்கள் கொண்ட ஏழு அணிகளாகப் பிரிக்கப்பட்டு மார்க்கம், மருத்துவம், பொது அறிவு ஆகிய மூன்று தலைப்புகளில்M.A. ஹபீப் ரஹ்மான்ஆலிம் மார்க்கம்,
டாக்டர் S. செய்யித் அஹ்மத் மருத்துவம் மற்றும் பொது அறிவுக்கான வினாடி – வினாவை காயல் வினாடி – வினா வல்லுன ர் L.T. இப்ராஹிம் ஆகியோர்களின் தொகுப்பில் 6 சு ற்றுக்களாக அமைத்து நடத்தப்பட்டது. போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இப்போட்டியை A.R . ரிபாய் மற்றும் S.A.C.ஹமீ துஆ கியோர்கள் ஒருங்கிணைத்தனர்.
போட்டியின் நிறைவில் J.S.A. புஹாரி காக்கா தலைமையிலானஅணிமுதற்பரிசையும், உமர் காக்கா தலைமையிலான அணி இரண்டாவது பரிசையும்பெற்றன.
சிறுவர், சிறுமிகளின் விளையாட்டுபோட்டிகள் V.S.T. ஷேக்னா லெப்பை அவர்களுடைய ஒருங்கிணைப்பில் மிகசிறப்பாக நடைபெற்றது.
நன்றி உரை:
இறுதியாக மன்ற இணைப் பொறுளாளர் N.K. அபுஹுரைரா இக்கூட்டம் சிறப்புற நட ந்தேற அருள் செய்த அல்லாஹ்வுக்கும், கலந்து சிறப்பித்த மன்றத்தின் அனைத்துறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள், சிறப்பழைப்பாளர்கள், பரிசுப் பொருள்கள்,
வாகனம் வசதி செய்து தந்தவர்கள் வழக்கம் போல் புகைப்படம் எடுத்துவைபவத்தை அழகுசேர்த்த நம்மன்ற போட்டோகிராபர் சகோதரர் N.M. சுப்ஹான் பீர் முகம்மது மற்றும் அலெக்ஸ் (நாகர்கோயில்) உள்ளிட்ட அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கப்பட்டது.
விழாவின் இறுதியாய் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் F.சாகுல் ஹமீது அவர்கள் துஆ இறைஞ்ச – ஸலவாத் – கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே–அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மாலை தேனீர் சமோஸா சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது. நிறைவில் அனைவரும் குழுமப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலதிகப் படங்களைக் காண இணைப்புகளின் மேல் அழுத்தவும்
https://plus.google.com/u/0/
செய்தி ஆக்கம்:ஜனாப். A.R. ரிபாய்.
நிழல் பட உதவி:ஜனாப். N.M. சுப்ஹான் பீர் முகம்மது மற்றும் அலெக்ஸ் (நாகர்கோயில்)
அபூதபீ காயல் நல மன்றம் சார்பாக,
செய்தி மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர்:
ஜனாப். M.E. முகியதீன்அப்துல்காதர்.