அதனைத் தொடர்ந்து முதல் வகுப்பினருக்கு ” இந்திய மாநில மக்களின் ஆடைகள் ” இரண்டாம் வகுப்பினருக்கு “நான் அதிகம் விரும்பும் தலைவர் “
மூன்றாம் வகுப்பினருக்கு “கல்வி கற்க குழந்தைகளை ஊக்குவித்தல் ” ஆகிய தலைப்புகளிலும் இந்தப் போட்டிகள் சிறப்பாக நடந்தது .
அடுத்த நாள் 14-11-2014 அன்று நம் அன்றாட வாழ்வில் உபயோகமற்றதாக புறந்தள்ளப்படும் கழிவுகளை பயனுள்ள பாவனைப் பொருள்களாக உரு மாற்றும் திறனை வளர்ப்பதற்காக நடத்தப்பட்ட “‘மீள் உற்பத்தித் திறனாய்வுப் போட்டியும்” சிறப்பாக நடந்தேறியது .
இந்தப் போட்டியில் 4ஆம் ,5ஆம் ,6ஆம் ,வகுப்பு மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர் .
போட்டியாளர்கள் போட்டிக்குத் தேவையான மூலப் பொருட்களை (கழிவுகளை ) தத்தமது வீடுகளிலிருந்தே கொண்டு வந்து பள்ளியில் ஆசிரியர்களின் முன்னிலையிலேயே தங்களின் கற்பனைத் திறனுக்கேற்றவாறு பொருள்களை மீள் உருவாக்கம் செய்து காண்பித்தது குறிப்பிடத்தக்கது .
அனைத்து போட்டி ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்த பள்ளி ஆசிரியைகளை நிர்வாகத்தினர் பாராட்டினர் .
நிலைப்படம் மற்றும் தகவல் : அறங்காவலர் S.I.புஹாரி