காயல்பட்டினத்தில் பெய்து வரும் மழையால் நகரின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது . சூழ்ந்துள்ள மலை நீரை அகற்றும் பணியில் நகராட்சி இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து பாதிக்கப்பட்டோர் மத்தியில் நிலவுகிறது .
சமூக நல ஆர்வலர்கள் , பொது அமைப்புக்களை சார்ந்தவர்கள் ஒத்துழைப்போடு சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன .அவைகளில் சிலவற்றை காட்சிப் படுத்தி உள்ளோம்.
மாட்டுக்குளம்
நகராட்சிப் பணியை பார்வையிடும் அரிமா சங்கத்தினர்.
வடமேற்குப் பகுதி
L.K.மெட்ரிக் பள்ளியின் மேற்குப் பகுதியில் நடைபெறும் வெள்ள நிவாரணப் பணியை பார்வையிடும் அரிமா சங்கத்தினர் .
நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்கும் சிறுவர்கள்
வெள்ளை எலி வேட்டை
மழை நேரத்தில் புறநகர் பகுதிகளில் புதருக்குள் வாழும் வெள்ளை எலிகளை பிடிப்பதை பொழுதுப் போக்காக சிலர் கருதுகின்றனர் . இன்னும் சிலர் மழை நேரத்து வேட்டைப் பொருளாக இதை கருதி மிகுந்த மகிழ்ச்சியுடன் உணவாக ஏற்றுக் கொள்கின்றனர் .
அரிமா சங்கத்தின் உதவி
வெள்ளப் பெருக்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பூந்தோட்ட பகுதி மக்களுக்கு காயல்பட்டினம் அரிமா சங்கத்தினர் உணவு வழங்கி உதவினர் .
உடைந்த குடிநீர்க் குழாய்
காயல்பட்டினத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய் ஆறுமுகநேரி உப்பளத்திற்கு அருகில், வெள்ள நிவாரணப் பணியில் ஈடுப்பட்டிருந்த JCP இயந்திரத்தால் உடைந்து விட்டது
இத்தகவலை அறிய வந்த அரசு அதிகாரிகள், உடனடியாக சீர் செய்யும் பணியை மேற் கொண்டனர் . குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் திரு பாலகிருஷ்ணன் , நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு பொன்வேல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் மிக வேகமாக ஊழியர்களால் இந்த உடைப்பு சரி செய்யப்பட்டதால் நகரின் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு தடுக்கப்பட்டது.
நிலைப்படம் மற்றும் தகவல் : முதன்மைச் செய்தி முகவர் , kayalconnection.com