ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 48-வது பொதுக்குழுக் கூட்டம்! ஒரு நாள் சம்பளம் ரூ. 72,000 நன்கொடை !
சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 48-வது பொதுக்குழுக் கூட்டம்!
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 48-வது பொதுக்குழுக் கூட்டம் 26.09.2014 வெள்ளிகிழமையன்று மஃரிப் தொழுகைக்கு பின் ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall-ல் ஹாஃபிழ்.M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் P.S.J. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் ஒருங்கிணைத்தார். ஹாபிழ்.ஹம்ஸா ழாஃபிர் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைக்க
ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோதரர்.கூஸ் அபூபக்கர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.பின்னர்,நம்மன்ற உறுப்பினர் இன்னிசைத்தென்றல் அய்யம்பேட்டை சகோதரர்.பக்கீர் முஹியித்தீன் அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
தலைவர் உரை:
அதனைத் தொடர்ந்து, மன்றத் தலைவர்,ஹாஃபிழ் M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அவர்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துரைக்கையில் ஊரிலிருந்து உதவி கோரி வரும் விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்கள் விரைவாக பரிசீலிப்பதால் பயனீட்டாளர்கள் உரிய நேரத்தில் பயனடைகிறார்கள் என்றும் பலர் நம் அனைவருக்கும் துஆச் செய்கிறார்கள் என்றுக் கூறினார்.
மேலும் IQRA வின் செயல்பாடுகள் குறித்தும் அதில் RKWA உறுப்பினர்களின் முக்கியத்துவத்தையும் தெளிவாக விளக்கிப்பேசினார். பின்னர்,நம்மன்ற உறுப்பினர் சகோதரர்.S.H. செய்கு அப்துல் காதர் அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
தொகுப்புரை :
மன்ற ஆலோசகர், M.E.L. செய்யிது அஹ்மது நுஸ்கி மன்ற உறுப்பினர்களின் சந்தா மற்றும் நன்கொடைகள் தொய்வின்றி வருவதாலும், முகமலர்ச்சியுடனும் திருப்தியுடனும் தருவது தம் மன்றத்தை ஊக்குவிப்பதாக கூறினார்.
மேலும் தனது உரையில் ஜன சேவா (வட்டி இல்லா வங்கி நமதூரில் துவக்க பட்டு இருப்பதை தெரிவித்து அதனால் என்ன நன்மை என்பதனையும் எடுத்துகூறி அதில் அனைவரும் இணையுமாறும் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து செயற்குழு உறுப்பினர் ஹைதர் அலி அவர்கள் நல்ல பல ஆலோசனைகள் வழங்கினார்.
மன்ற செயற்குழு உறுப்பினர் கூஸ் அபூபக்கர் தனக்கே உரித்தான நகைசுவை பாணியில் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் கூறி உரையாற்றினார்.
ஒரு நாள் சம்பளம்:
இப்பொதுக் குழுவின் போது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக உறுப்பினர்கள் வெள்ளைக் கவரில் வைத்து பெட்டியில் போட்டனர். பின்னர், உறுப்பினர்கள் முன்னிலையில் கணக்கிடப்பட்டு மொத்தம் ரூ.72,000 நன்கொடையாக நிதி திரட்டப்பட்டது.
வினாடி வினா போட்டி:
சூப்பர் செய்து இப்ராகிம் அவர்களின் தொகுப்பில் உருவான அழகிய வினாடி-வினா போட்டி 4 அணிகளாக பிரிக்கப்பட்டு, 6 சுற்றுக்களாக அமைத்து நடத்தப்பட்டது. போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.
இறுதியாக முதல் மூன்று அணியினர்க்கு அனுசரணையோடு கூடிய அழகான பரிசுகளும் வழங்கப்பட்டது.
நன்றியுரை :
நிறைவாக செயற்குழு உறுப்பினர் இஸ்ம்த் நவுபல் நன்றியுரை ஆற்ற P.S.J.ஜைனுல் ஆப்தீனின் இறைப்பிரார்த்தனைக்குப் பின் காயல் களரி கறி விருந்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுப் பெற்றது.
நிலைப்படம் மற்றும் தகவல் :SEYED ISMAIL