அக்டோபர் 10ம் தேதி 2014 அன்று உலக மனநல நாள் துளிரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்விற்கு துளிர் செயலர் எம்.எல். சேக்னா லெப்பை அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமிகு .கு. விவேகானந்தர் B.A.,B.L., கலந்து கொண்டார்.
துளிரின் மறுவாழ்வுதிட்டபணிகளின் தலைவர் வஹிதா, தன்னார்வளார் எம்.என். சுலைமான் , வழக்கறிஞர்கள் எட்வர்ட், சாதிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துளிரின் தன்னார்வளர் எம்.என்.சுலைமான் அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஒருங்கினைப்பாளார் சித்தி ரம்ஜான் துளிர்அறிமுக உரையுடன் மனநல பற்றிய அறிமுக உரையாற்றினார். உலக அளவில் சுமார் 5 கோடி மக்கள் மனச்சிதைவு பாதிப்புடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் .
அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் அடங்கும் இதில் 10 சதவீதம் பேர் தற்கொலையால் இறக்கின்றனர். மனநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் குறைவனனோர் தான் மருத்துவ உதவியை நாடுகின்றனர்.
ஆதரவின்றி தெருக்களில் திரியும் பெரும்பாலான மனநோயாளிகள் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர் தான் சாதக மற்ற வாழ்கை சூழல் , மன மற்றும் உடல் நீதியான பாதிப்பு போதைப பழக்கங்கள் கலாச்சார மாற்றங்கள் போன்றவை மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களே! மனச் சிதைவுநோய் ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. தற்கொலையில் இறப்போர் எண்ணிக்கை கொலைகள் மற்றும் போர்களில் மூலம் உயிர் இழப்பவர்கள்காட்டிலும் அதிகம் உள்ளது.
குறிப்பாக இளைய சமூகத்தினர்(15-19) வயத்திற்கு உட்பட்டவர்கள் 1 லட்சம் பேர் ஓவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்கின்றனர் கடந்த ஆண்டுகளில் தற்கொலை சம்பவம் 10 சதவீதம் அதிகாரித்துள்ளது. என்று குறிப்பிட்டார்.
முன்னிலை வகித்த வழக்கறிஞர்; சாதிராஜ் பேசும்போது உலக மனநல நாளான இன்று இந்த துளிர் பள்ளியின் மனநல நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் இந் நிறுவனம் இந்த வட்டரத்தில் உள்ள இயாலாநிலை குழந்தைகள் பயன் பெறும் வகையில்,
இந்தபள்ளியை எங்கள் நண்பர் வழக்கறிஞர் ஹச்.எம். அஹமது அவர்கள் நிறுவி; அதன் தலைவராக இருந்து நடத்தி வருவது வழக்கறிஞர்களாகிய நாங்கள் எண்ணி பெருமைப்படுவதாக குறிப்பிட்டார்.
முன்னிலை வகித்த வழக்கறிஞர் எட்வர்ட் பேசும் போது மனச் சிதைவு நோய் மருந்துகளால் குணப்படுத்த கூடியது. ஆரம்பக் கட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை ஆரம்பக்கப்பட்டால் எளிதில் கட்டுப்படுத்தலாம்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் தாலுகா மருந்துவ மனைகள் மற்றும் அரசு தலைமை மருந்துவ மனைகளில் மனநல மருந்துவர் மற்றும் சமூக நலப் பணியாளர்கள் பணியமார்த்தப்பட்ட வேண்டும். என்று குறிப்பிட்டார்.
தலைமை உரையாற்றிய திருமிகு. கு.விவேகானந்தர் தனது உரையில் தாம் பதவிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் மனநல நாளில் பல இடங்களுக்கு சென்றுள்ளோம். இதுப்போன்ற இல்லங்களுக்கும் சென்றதாகவும் ஆனால் இந்த மாற்றுத்திறன் பள்ளிக்கு வந்ததது மனத்திற்கு இதமான மனஅமைதியை தருகிறது.
சமூகத்தொண்டு ஆற்றுவதனால் மட்டுமே மனநலம் காப்பதற்க்கு முடியும். இந்த குழந்தைகளுக்கு யாரையும் ஏமாற்ற தெரியாது யாருக்கும் துரோகம் செய்யமாட்டார்கள்.யாரையும் பழிவாங்கும் எண்ணம் இருக்காது சில இயலாமைகள் இருந்தாலும் நம்மிடம் இல்லாத சிறப்பு குணங்கள் இக்குழந்தைகளிடம் நிறைய உண்டு.
இந்த தெய்வ குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த சேவையினை செய்ய வேண்டும்.குழந்தைகளின் பெற்றோர்க்கு ‘எங்கள் காலத்திற்கு பிறகு இவரை யார் கவனிப்பார்கள்?’ என்ற கவலை இருக்கும். இந்த சூழ்நிலையில் குழந்தைகளின் உடன்பிறந்த உறவுகளை அழைத்து இக்குழந்தைகளை ஒதுக்காமல் எப்படி கவனித்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதுபோன்ற குழந்தைகளின் நலனுக்காக தொண்டுபுரியும் அனைவருக்கும் இறைவன் என்றும் துணை இருந்து உதவிபுரிவார் என்றும் கூறினார்.
பள்ளியின் சார்பில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி மற்றும் வினாடி-வினா நிகழ்வுகள் மிகவும் அற்புதம் எனவும் , இக்குழந்தைகளுக்குள்ளும் இந்த திறமைகள் இருப்பதை பார்த்து வியப்பும் , பெருமிதமும் அடைவதாகவும் குறிப்பிட்டார்.
மனநலம் பெற அமைதி பெற உலக மனநல நாளை நினைவு படுத்தும் இந்நிகழ்வில் மனநலம் பற்றிய கருத்துகள் பறிமாரப்பட்டது. இறுதில் நீதிபதி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி
இறுதியாக துளிர் செயலர் எம்.எல். சேக்னா லெப்பை பேசும்போது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒர் மூலையில் ஒருவர் தற்கொலை செய்கிறார் இந்நிலை மாறவேண்டும். என்று கூறியதோடு அனைவருக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
நிலைப்படம் மற்றும் தகவல் : Thulir School