காயல்பட்டினம் நகர்மன்ற ஒன்றாவது வார்டுக்கான் இடைத்தேர்தலில் போட்டியிடும், கோமான் ஜமாஅத்தின் பொது வேட்பாளர் S.I.அசரபு கடையக்குடி ,அருணாசலபுரம் ஆகிய பகுதிகளில் தனது முதல்கட்ட வாக்குச் சேகரிப்பை ஏற்கனவே நிறைவு செய்து விட்டார் .
இந்நிலையில், கோமான் கிழக்கு மற்றும் மேற்குத் தெருக்களில் ஏற்கனவே வாக்கு சேகரிப்பை முடித்து விட்ட வேட்பாளர் அசரபு, எஞ்சி இருந்த கோமான் நடுத்தெருவில் நேற்று முன்தினம் வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்டதின் மூலம், தனது முதல் கட்ட வாக்கு சேகரிப்பை நிறைவு செய்துள்ளார்.
மேலும், நேற்றும் இன்றும் மீண்டும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு மீண்டும் அப்பகுதி மக்களை சந்தித்து வருகிறார். செல்லும் இடம் அனைத்தும் ,அவருக்கு அன்பான வரவேற்பு அளித்து, மக்கள் தங்கள் ஆதரவை உறுதிப் படுத்துகின்றனர்
நிலைப்படம் :Fazin