எல்.கே. மேனிலைப்பள்ளி
எல்.கே. மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் பள்ளியின் துணைத்தலைவர் அல்ஹாஜ்.எஸ்.எம்.உஜைர் தேசிய கொடியேற்றி, விழா குறித்து உரையாற்றினார்.
முன்னதாக இப்பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகளை நிர்வாகிகள் வழங்கினர்.
தலைமை ஆசிரியர் செய்யது அஹ்மது உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்றனர்.
நிலைப்படம் : shaik salahudeen
………………………………………………………………………………………………………………………………………………………….
எல்.கே.மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி
எல்.கே.மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியை செய்யதலி பாத்திமா தேசிய கொடியேற்றினார். மாணவிகள் பங்கேற்ற சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
பள்ளி முதல்வர் திருமதி.மீனா சேகர் உள்ளிட்ட ஆசியைகளும் திரளான மாணவிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிலைப்படம் : வீனஸ் மணி
………………………………………………………………………………………………………………………………………………………….
சென்ட்ரல் மேனிலைப் பள்ளி
சென்ட்ரல் மேனிலைப் பள்ளியில் 68 ஆவது விடுதலை நாள் விழா நடைபெற்றது. ஜனாப்; K.M.S.சதக்கு தம்பி தலைமை தாங்கினார். ஜனாப் M.A.செய்யது முஹம்மது அலி, ஜனாப் வாவு K.S.முஹம்மது நாசர், ஜனாப் M.K.முகைதீன் தம்பி(துரை), ஜனாப் A.H.நெய்னா சாகிப், ஜனாப் A.H.அப்துல் ஹக், ஜனாப் V.I.ஜெய்னுல் ஆப்தீன், ஜனாப் M.T.ஜாபர் சாதிக், ஜனாப் V.S.H.முகம்மது முகைதீன், ஜனாப் V.N.S.முகம்மது முகைதீன் ஆகியோர் முன்னிலையில் விழாவில் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர் அல்ஹாபிழ் P.M..rjf சதக்கத்துல்லா சஃபுஹ் இறைமறை ஒதி துவங்கிய இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் K.சாகுல் ஹமீது M.Com,M.Ed., அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
முன்னதாக வாவு அறக்கட்டளை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப். வாவு M.M.சம்சுதீன் தேசியக் கொடியேற்றினார். பின் அனைவர்களும் உறுதி மொழியேற்றனர்.
தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்வு
இந்த நிகழ்ச்சியினை ஜனாப் அல்ஹாபிழ் M .I.யூசுப் சாஹிப் தொகுத்து வழங்கினார்கள்.
இறுதியாக பள்ளி ஆசிரியர் ஜனாப் M.K.செரீப் M.A.,M.Ed நன்றியுரை ஆற்றினார்கள். விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது. விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிலைப்படம் : ஆசிரியர். N.ரபீக் அஹமது M.A.,B.Ed
தகவல் : ஆசிரியர். A.பீர் முஹம்மது உசேன் M.Sc.,B.Ed
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகி ஆர்.எஸ்.அப்துல் காதிர் தலைமை தாங்கினார் வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, எஸ்.ஏ.முஹம்மது அலீ, ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஜெஸ்மின் ஏ.கே.கலீலுர்ரஹ்மான், டாக்டர் பி.ஏ.எம்.ஜாஃபர் ஸாதிக், ஏ.கே.ஷம்சுத்தீன், கே.எம்.டி.சுலைமான், ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ, ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மது ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஹாஃபிழ் எம்.எல்.ஸதக்கத்துல்லாஹ் இறைமறை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் டி.ஸ்டீஃபன் வரவேற்றார்.
நகர பிரமுகர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மது தேசிய கொடியேற்றி உரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஒருமைப்பாட்டு உறுதிமொழியை உரைத்தனர். மாணவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுபெற்றது.
மகளிர் பிரிவு
இப்பள்ளியில் மகளிர் பிரிவின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்.ஏ.கே.கிதுரு ஃபாத்திமா தலைமை தாங்கினார். பள்ளி மாணவி நஸீஃபத் ஸக்கீனா வரவேற்புரையாற்றினார். எம்.ஏ.சுபைதா தேசிய கொடியேற்றிவைத்து உரை நிகழ்த்தி சாதனை புரிந்தோருக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்றோர் ஒருமைப்பாட்டு உறுதிமொழியை உரைத்தனர். ஆயிஷா ஹினாயா நன்றி கூறினார்.
துளிர் பள்ளி
துளிரின் மாற்றுத்திறன் சிறார்கள் 68ஆவது சுதந்திர தினத்தை மகிழ்வுடன் கொண்டாட துளிர் சிறப்புப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை காலை இப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் சேக்னா லெப்பை தலைமையேற்றார்.
இந்து தமிழ் நாளேட்டின் சிறப்பாசிரியர் சமஸ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பு குழந்தைகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இலங்கை காயல் நல மன்றத்தின செயலர். ரஃபீக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
துளிர் நிறுவனர் வக்கீல் அஹ்மத் சுதந்திர தின நாளில் துளிரின் பணியாளர்கள் அனைவரும் மேலும் அர்பணிப்புடன் செயலாற்ற கேட்டுக்கொண்டார்.
தனவந்தர்கள் பலரும் துளிருக்கு உதவிகள் வழங்குவதற்கு நன்றி தெரிவித்தார். பெற்றோர்களும் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து உதவ வேண்டுகோள் விடுத்தார்.
துபை காயல் நல மன்ற பிரதிநிதி முனவ்வர் ஷக்காஃப் துளிரின் குழந்தைகளுக்கு இனிப்பும், குளிர்பானமும் வழங்கினார். துளிர் சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இலங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் துளிருக்கு பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு தொட்டிகள் வழங்கப்பட்டன. துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான் நன்றி கூறினார்.