மஹழரா
காயல்பட்டினத்தில் 28-07-2014 திங்கட்கிழமை, இன்று மஃரிப் தொழுகைக்குப் பின்னர் மஹழராவில் நமதூர் மார்க்க அறிஞர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில், 29-07-2014 செவ்வாய்க்கிழமை காலை பெருநாள் என அறிவிக்கப்பட்டது. பெருநாள் பற்றிய அறிவிப்பை கீழே வழங்கியுள்ளோம்.
TNTJ தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தின்( TNTJ) பள்ளியான, அலியார் தெருவில் உள்ள மஸ்ஜித் தவ்ஹித் பள்ளியிலும் இதே முடிவையே அறிவித்து 29-07-2014 செவ்வாய்க்கிழமை நாளை காலை 07:15 மணியளவில் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மார்க்கம் சார்ந்த பல்வேறு விசயங்களில் முரண்பட்டு நிற்கும் சுன்னத்துவல் ஜமாஅத் மற்றும் தவ்ஹித் ஜமாஅத்தினர் நோன்பு முதல்நாள் மற்றும் பெருநாட்களில் மட்டும் ஒன்று படுகின்றனர் என்பது, வியப்பூட்டுவதாக இருப்பினும் வரவேற்புக்குரியதும், மகிழ்ச்சிக்குரியதுமாகும்.
மூன்று நாட்களாக வரும் பெருநாள், ஒரே நாளில் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த நாள் வருமா ? வரும் என்று நம்புவோம். அதற்காக இறையருளை வேண்டுவோம் !
நிலைப்படம் : ஏ.ஆர்.சேக்முகம்மது.