போரின் இரு முகங்கள்: கனக்க வைக்கும் கண்ணீரும், வேடிக்கை மனிதர்களும்!
வேடிக்கை
வேடிக்கை மனிதர்கள் : பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ராக்கெட் குண்டு வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, டெராட் நகரின் குன்றின் மீது அமர்ந்து அதை வேடிக்கை பார்க்கும் இஸ்ரேலியர்கள்.
வேதனை
கனக்க வைக்கும் கண்ணீர் : பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்திய ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதலில், காஸா நகரத் தலைமைக் காவலர் அல்-பாட்ஷின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். தன் உறவினர்களை இழந்த பாலஸ்தீனச் சிறுவன் கண்களில் தேங்கிநிற்கும் கண்ணீருடன்…
பரிதவிக்கும் பாலகனைப்பார்த்து இணையம் ஒன்றில் உருகும் இதயங்கள்
SALEEM from VADODARA
கண்களில் கண்ணீர் வருகிறது… அல்லாஹ் போதுமானவன்… அவன் பார்த்துகொள்வான் இந்த கொடூரக்காரர்களை.
சாதிக் from DOHA
அழாதே சகோதரா…. உன் கண்ணீருக்குண்டான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்….
DEVA from NAGERCOIL
முதன் முதலாய்….ஒரு புகைப்படம் பார்த்து அழுகிறேன்….நிஜமாய் என் கண்களில் நீர் வடிகிறது..முகவரி தெரியாத உன் பிஞ்சு முகத்திற்காக….
Mohamed from ABU DHABI
இறைவா அநிய்யாயகாரகளுக்கு எதிராக உன் உதவியை இறக்கிவைப்பாயாக !! என் சகோதரர்களுக்கு நிம்மதி தருவாயாக.
நிலைப்படம் மற்றும் தகவல் : இணைதளங்கள் மற்றும் தி இந்து தமிழ் நாளிதழ்