‘தாயன்பு’ என்ற தலைப்பில் சிறுகதைப் போட்டியாக, நமது இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட, முதல் பரிசுப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு, பரிசளிக்கும் நிகழ்ச்சி 3-2-2013 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது.
நமதூர் முதன்மைச்சாலையில் அமைந்துள்ள, செய்யிது இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில், kayalconnection.com அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.
நமது இணையதளத்தின் ஆலோசகர்களில் ஒருவரான, ஹாஜி எஸ்.ஏ. முஹ்யித்தீன் தம்பி இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார்.
இறைமறை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த தலைவர், முதல் இடம் பெற்ற (எம்.என். கதீஜாவின் சார்பில் வருகை தந்த அவரது தந்தை) கே.எம். முஹம்மது நூஹுவிடம் பரிசினை வழங்கினார்.
நமது இணையதளத்தின் மற்றொரு ஆலோசகரான, ஹாஜி எஸ்.எம். உஜைர், இரண்டாம் இடம் பெற்ற, ஏ.எல். லெப்பை சாகிபு என்ற ஏல்.எல்.எஸ். இப்னு அப்பாஸிடம் பரிசினை வழங்கினார்.
நமது இணையதளத்தின் பிரிதொரு ஆலோசகரான, ஹாஜி எம்.என். செய்யிதகமது பி.காம். மூன்றாம் இடம் பெற்ற வி.எம். அப்துல் ரியாஸிடம் பரிசினை வழங்கினார்.
ஜே.எஸ். முகம்மது அபூபக்கர் மற்றும் Ln.ஹாஜி எஸ்.சாமு சிகாபுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்கனெக்சன் முதன்மைச் செய்தி முகவர் ஜே.முஹம்மது லரீஃப், பதிவேற்றப் பொறுப்பாளர் குளம் ஜமால் முஹம்மது, மாற்றுப் பதிவேற்றப் பொறுப்பாளர்கள் எஸ்.பி.பி. புஹாரி மற்றும் வாவு கே.ஏ. சாகுல் ஹமீது ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இணையதள பொறுப்பாளர் காயல் எஸ்.இ. அமானுல்லாஹ் நிகழ்ச்சியினை நெறிப்படுத்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பரிசு பெற்றோருக்கு வாழ்த்துகள்.
நிழற்படம்: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com மற்றும் வீனஸ் மணி.