16-04-2014 அன்று நமதூரில், ஆம் ஆத்மி தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எம்.என்.அஹமது ஸாஹிபு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துணைத் தலைவர் ஜனாப் இஜ்ஜதீன், காயல்பட்டினம் நல அறக்கட்டளைத் தலைவர் ஹாஜி அபூபக்கர், காயல்பட்டினம் ஊழல் எதிர்ப்பு இயக்கத் துணைத் தலைவர் ஜனாப் அப்துல் வாஹிது, ஜனாப் மீரா ஸாஹிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன்குடி ஜனாப் முஹியத்தீன்,
ஆம் ஆத்மி தூடி மாவட்ட பிரச்சார குழு ஒருங்கிணைப்பாளர் திரு.ஜோதிமணி,
ஆம் ஆத்மி மாவட்ட பிரச்சார குழுத் தலைவர் திரு. சுபாஸ் ஃபர்ணான்டோ மற்றும் ஆம் ஆத்மி உடன்குடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு.குணசீலன்,ஆம் ஆத்மி கழகப் பேச்சாளர் நெல்லை சிவா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
காயல்பட்டினம் ஆம் ஆத்மி பிரமுகர் ஜனாப் அஹமது ஸாஹிபு உரை நிகழ்த்தும் போது பரபரப்பூட்டினார். இம்மேடை தான் இவரது அரசியல் கன்னிமேடை என்பதை நம்பமுடயாத அளவிற்கு நிதானமாக, அதேநேரம் உறுதியான குரலில் உரையாற்றினார்.
மற்ற கட்சிகளை சாடினார். முஸ்லிம் லீக் கொள்கைப்பரப்புச் செயலாளர் காயல் மகபூபின் கடந்த பொதுக் கூட்டப் பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
அண்மையில், உம்ராவை நிறைவேற்றியதாக சொல்லும் காயல் மகபூப், கஃபாவில் தொப்பி அணிந்து இருந்தாரா ? வேறு எவரையும் தொப்பி அணியக் கண்டாரா ? தொப்பிக்கும் மார்க்கத்திற்கும் என்ன சம்பந்தம் ?
நாங்கள் கட்சிகாக மட்டும் தொப்பி அணிவதாக அவர் எப்படி கருத்து தெரிவிக்கலாம் என்பன போன்ற கண்டனக் கனைகளை அவர் வீசினார்.
பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பதாகக் கூறும் காயல் மகபூப், அடுத்தவர் உதவியில் உம்ரா செல்லவேண்டிய அவசியம் என்ன ? மார்க்கம் அப்படியா சொல்கிறது ?
வசதியுள்ளவர்கள்தானே ஹஜ், உம்ரா அமல்களை நிறைவேற்ற வேண்டும். இதைக்கூட தெரியாத காயல் மகபூப், எங்களை விமர்ச்சிக்க தகுதியற்றவர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தனிப்பட்ட முறையில் சில குற்ற சாட்டுக்களையும் காயல் மகபூபுக்கு எதிராகத் தொடுத்தார்.
ராஜ பக்சே இலங்கை தமிழர்களை அழித்த போது, அதை வைத்து அரசியல் செய்த கருணாநிதி , குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போது, பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார் .
பாதிக்கப் பட்ட கோவை முஸ்லிம்களுக்கு நியாயம் கேட்க சென்ற போது, முஸ்லிம் ஜமாத்துக்களை காக்கவைத்து, அவமானம் படுத்தி, நியாயம் வழங்க மறுத்தார்.
கருணாநிதி முஸ்லிம்களின் காவலராம் . நம்மை அல்ல அவரைக் கூட அவரால் பாதுகாக்க முடியாது.
நம்மை பாதுகாக்க ரப்புல் ஆலமீன் போதுமானவன் என்று தி மு க வையும், கலைஞரையும் சாடிய அவர், காயல்பட்டினம் இனி கலைஞர் பட்டினம் இல்லை. இது கண்ணியவான்களின் பட்டினம் என்றும் குறிப்பிட்டார்.
அரசியலை சுத்தம் செய்ய வந்திருக்கும் ஆம்ஆத்மி க்கு வாய்ப்பு தாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். துவக்கக் கூட்டத் திலேயே அவரின் எதிர்நிலை அரசியல் உரை, வியப்போடு பலரை புருவம் உயர்த்தவைத்தது. |
இந்நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்
கேன்சர் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க, ஜித்தா காயல் நற்பணி மன்றம் மற்றும் Z + MEDIA NET WORK இணைந்து தயாரித்த குறுந்தகுடு ஆம் ஆத்மியின் சார்பில் அவையோருக்கு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் திரு. புஷ்பராயன் வாக்கு கேட்டு உரை யாற்றினார். அவரது உரையை அசைப்படப் பதிவாக கீழே வழங்கியுள்ளோம்.
ஜனாப் படவானம் சாலியான், ஜனாப் மாஷா அல்லாஹ் தாவூது, ஜனாப் மாஷா அல்லாஹ் செய்யது, ஜனாப் மரக்கடை காதர், ஜனாப் ரிஜ்வி, ஜனாப் சிம்சன் உமர், ஆம்ஆத்மி செய்யது ஆகிய ஆம் ஆத்மி பிரமுகர்களும்,
ஆம்ஆத்மியின் அங்கத்தினர்களும், அனைத்து ஜமாஅத் பெரியவர்கள் அனைத்து சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், பத்திரிக்கை நண்பர்கள், இணையதள நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழன் முத்து இஸ்மாயில் மற்றும் அமீர் சுல்தான் ஆகியோர் இக்கூட்டம் சிறப்பாக நடைபெற உறுதுணைப்புரிந்தனர்.
புதிய கட்சியான இதன் பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்றதும், இறுதிவரை கூட்டத்தில் அவர்கள் நிலைத் திருந்ததும், கலைந்து செல்கையில் அவர்களில் பலர் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததும் கொஞ்சம் யோசிக்கவைகிறது.
தேர்தலில் இவர்கள் எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தபோகிறார்கள் என்பதும் முடிவில்தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.
நிலைப்படம் : முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com
தகவல் : ஆம் ஆத்மி காயல்பட்டினம் நகர அமைப்பு