நமதூரில் 17-04-2014 இன்று நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர் திரு.ஏ.டி.கே.ஜெயசீலன் தலைமையில் தி.மு.க வினர் வீதிகளில் வாக்குச் சேகரித்தனர்.
இந்த வாக்குச் சேகரிப்பில் நகர தி.மு.க செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் உள்ளிட்ட தி.மு.க வினர் திரளாக பங்கேற்றனர்.
முன்னதாக 15 ஆவது வார்டு தி.மு,க செயலாளர் டீக்கடை சாமு தலைமையில் அவரது வார்டில் தி.மு.க வினர் வாக்குச் சேகரித்தனர்.
வீதியில் வாக்குச் சேகரிப்பதும் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவதும் முன் எப்போதையும் விட இத்தேர்தலில் நகரில் அதிகரித்துள்ளது.
பலமுனைப் போட்டி இருப்பதால், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கூட வெற்றிபெற வாய்ப்பு உண்டு என்பதால் அரசியல் கட்சியினர் இந்த யுக்தியை அதிகமாக தற்போது பயன்படுத்துகின்றனர்.
நிலைப்படம் : வீனஸ் மணி
தகவல் : நகர செயலாளர் ஜெய்னுத்தீன் மற்றும் சாமு